வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?

வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?

Suguna Devi P HT Tamil
Dec 08, 2024 02:27 PM IST

விழாக்காலங்களிலும், குறிப்பிட்ட நாள் இடைவெளியிலும் நாம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் இந்த சமயங்களில் வீட்டில் உள்ள தூசிகள் நமது நாசியில் ஏறி பல சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?
வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?

வீட்டின் அழுக்கை துடைப்பதற்கு முன் சில நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மிகவும் பிறகு கவனமாக இருங்கள், நமது வீட்டின் தூசிகல் பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தூசி இல்லாமல் இருப்பது தெரிந்தால் அங்கு மிகவும் ஆபத்தான கிருமிகள் மறைந்திருக்கலாம். எனவே இதனை கவனமாக கையாள வேண்டும்.

வெறும் கண்களுக்குத் தெரியாது

இந்த கிருமிகளை நமது வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.  பாக்டீரியா, மைக்ரோ-டாக்சின்கள் போன்றவை நமது வீட்டிற்குள் ஒளிந்து இருக்கும். அதை சுத்தம் செய்யாவிட்டால், அதன் அளவு அதிகரித்து நோய்கள் அடிக்கடி வரும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்தான நியூயார்க் மாநில சுகாதாரத் துறை அறிக்கையின்படி, 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்ட அளவுக் கொண்ட (PM25) நுண்ணிய துகள்களின் வெளிப்பாடு மிகவும் ஆபத்தானது. PM 2.5 தூசியை சுவாசிப்பது இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக 40 மைக்ரான் அளவுள்ள தூசித் துகள்களை மட்டுமே நமது வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்குக் கீழே அளவுள்ள துகள்கள் நுரையீரல் வழியாக என்று நமது இரத்த ஓட்டத்தில் கலந்து இருமல், கண்களில் நீர் வடிதல், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழிவகுக்கிறது. இவைகளை நீண்டகாலம் வெளிப்படுத்துவதால் இதயக் கோளாறுகள், செரிமானக் கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவை ஏற்படும்.

தூசியிலிருந்து பாதுகாக்க

வெறும் கண்ணால் பார்க்க முடியாத தூசியை அகற்ற சாதரண துணிக்குப் பதிலாக மைக்ரோஃபைபர் துணிகளைப் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு வெற்றிட கிளீனர் 99.7 சதவீத தூசி துகள்களை அகற்றும். வீட்டிற்குள் வளரக்கூடிய தாவரங்களை வீட்டிற்குள் வைத்திருப்பது சுத்தமான காற்றைப் பெற உதவும். மேலும் சீரான இடைவெளியில் வீட்டை சுத்தம் செய்யுங்கள். இவை அனைத்தையும் தொடர்ந்து பின்பற்றுவது உங்களை வீட்டின் மைக்ரோ தூசிகளில் இருந்து பாதுகாக்கும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.