வீட்டை சுத்தப்படுத்துகிறீர்களா! அதற்கு முன் இதை கவனியுங்கள்! வீட்டுத்தூசியால் ஆபத்தா?
விழாக்காலங்களிலும், குறிப்பிட்ட நாள் இடைவெளியிலும் நாம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் இந்த சமயங்களில் வீட்டில் உள்ள தூசிகள் நமது நாசியில் ஏறி பல சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

விழாக்காலங்களிலும், குறிப்பிட்ட நாள் இடைவெளியிலும் நாம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் இந்த சமயங்களில் வீட்டில் உள்ள தூசிகள் நமது நாசியில் ஏறி பல சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே தற்போது அதிகம் பேர் முக கவசம் அணிந்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்துகின்றனர். இதனையே சுகாதர நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த தூசிகள் சுவாச கோளாறுகளைக் காட்டிலும் மிகவும் ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டின் அழுக்கை துடைப்பதற்கு முன் சில நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மிகவும் பிறகு கவனமாக இருங்கள், நமது வீட்டின் தூசிகல் பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தூசி இல்லாமல் இருப்பது தெரிந்தால் அங்கு மிகவும் ஆபத்தான கிருமிகள் மறைந்திருக்கலாம். எனவே இதனை கவனமாக கையாள வேண்டும்.
வெறும் கண்களுக்குத் தெரியாது
இந்த கிருமிகளை நமது வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை. பாக்டீரியா, மைக்ரோ-டாக்சின்கள் போன்றவை நமது வீட்டிற்குள் ஒளிந்து இருக்கும். அதை சுத்தம் செய்யாவிட்டால், அதன் அளவு அதிகரித்து நோய்கள் அடிக்கடி வரும் வாய்ப்பு உள்ளது.
