சீரற்ற தூக்கம் அல்சைமர் நோய் ஆபத்தை அதிகரிக்க காரணமா? புதிய ஆய்வு சொல்லும் உண்மை என்ன? முழு விவரம் இதோ!
சீரான மற்றும் ஒழுங்கு அல்லாத தூக்கம் நேரடியாக மூளை மாற்றத்தோடு கூடிய அல்சைமர் நோயுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். சரியான தூக்கம் இல்லாதது ஒருவரது ஆரோக்கியத்தை பல வகையில் பாதிக்கும். அந்த வகையில் சீரற்ற தூக்கம் மற்றும் விரைவான கண் இயக்கத்தோடு கூடிய தூக்கம் என இரு வகையான தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்சைமர் குறைபாடு வருவதற்கான ஆபத்து அதிகம் என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்வில் தூக்கத்தை முன்னுரிமை படுத்த பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது மூளை ஆரோக்கியம் தான்.
ஆய்வாளர் கருத்து
கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் முதுகலை உதவியாளராக இருக்கும் கவோன் சோ கூறுகையில், "தூக்கத்தின் போது குறைக்கப்பட்ட நரம்பியல் செயல்பாடு மூளைச் சிதைவுக்கு பங்களிக்கக்கூடும் என்பதற்கான ஆரம்ப ஆதாரங்களை எங்கள் கண்டுபிடிப்புகள் வழங்குகின்றன, இதனால் அல்சைமர் நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்" எனத் தெரிவித்தார்.