வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பானம் சரியான தேர்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பானம் சரியான தேர்வு!

வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பானம் சரியான தேர்வு!

Suguna Devi P HT Tamil
Published Apr 24, 2025 01:16 PM IST

கோடையில் குளிர்ச்சியான உணவுகள் உடலுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக வெயில் காலத்தில் அதிக அளவில் திரவ உணவுகளை எடுக்க வேண்டும். அதிகமாக வெப்பத்திற்கு வெளியே சென்றால் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து தடுக்க வெயிலில் சென்று திரும்பிவர்களுக்கு புதினா பானம் கொடுக்கலாம்.

வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பயணம் சரியான தேர்வு!
வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பயணம் சரியான தேர்வு!

கோடையில் விருந்தினர்கள் திடீரென வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. கூல் டிரிங்க்ஸ் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வெயிலில் வருபவர்களுக்கு உடலுக்கு குளிர்ச்சி பானம் கொடுக்க வேண்டும் என்றால் இங்கே புத்துணர்ச்சியூட்டும் புதினா பானம் செய்முறையைக் கொடுத்துள்ளோம். இதன் சுவை அற்புதமாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. இது உடலை குளிர்விக்கவும் உதவுகிறது.

புதினா இலை இயற்கையாகவே குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கோடையில் உடலை உள்ளே இருந்து குளிர்விக்கிறது. எனவே வீட்டில் வெயிலில் இருந்து வெளியே வருபவர்களுக்கு, இந்த பானம் உடல் சூட்டை கட்டுப்படுத்தவும் உதவும். இது செய்வது மிகவும் எளிது. செய்முறையை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ஒரு கப் புதினா இலைகள்

தேவையான அளவு உப்பு

கால் டீஸ்பூன் சர்க்கரை

2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு

3 ஐஸ் க்யூப்ஸ்

சோடா

செய்முறை

முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸி சாரில் போட்டு அரைத்துஎடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது ஒரு டம்ளரில் அரைத்த புதினா இலைகளை போட்டு அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் சோடா அல்லது ஸ்பிரைட் சேர்க்கவும். அவற்றில் ஐஸ் க்யூப்ஸைச் சேர்க்கவும், சுவையான புதினா பானம் தயாராக உள்ளது.

விருந்தினர்கள் திடீரென வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு குளிர்பானங்களுக்கு பதிலாக இந்த புதினா பானத்தை கொடுங்கள். இது மிகவும் சுவையானது மட்டுமல்ல, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதும் கூட. டம்ளரில் பரிமாறும்போது பானத்தை சிறிது அலங்கரிப்பது நல்லது. டம்ளரின் வாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கருப்பு உப்பு சேர்த்து அலங்கரித்து பின்னர் பானத்தை பரிமாறவும். இது எளிய பானங்களையும் சிறப்பானதாக மாற்றும்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.