வெயிலில் சென்று திரும்பியவர்களுக்கு குளிர்ச்சியான பானம் கொடுக்க வேண்டுமா? இந்த புதினா பானம் சரியான தேர்வு!
கோடையில் குளிர்ச்சியான உணவுகள் உடலுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக வெயில் காலத்தில் அதிக அளவில் திரவ உணவுகளை எடுக்க வேண்டும். அதிகமாக வெப்பத்திற்கு வெளியே சென்றால் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து தடுக்க வெயிலில் சென்று திரும்பிவர்களுக்கு புதினா பானம் கொடுக்கலாம்.

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஜூன் மாத நடுப்பகுதி வரை கடுமையான வெயில் காலம் நிலவுகிறது. இந்த வெயிலில் இருந்து நமது உட்புற மற்றும் வெளிப்புற உடலை கவனமாக பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் உடலின் வெப்பநிலை சீர்குலைந்து பல ஆரோக்கிய பிரச்சனைகள் வரும் அபாயம் அதிகரிக்கும். இது போன்ற வெயில் காலத்தில் நமது உணவுகள் வாயிலாக நாம் நிவாரணம் பெறலாம். இந்த வரிசையில் நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை விட உடலின் வெப்பநிலையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெயிலில் சென்று வீடு திரும்பியவர்கள் அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடையில் விருந்தினர்கள் திடீரென வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. கூல் டிரிங்க்ஸ் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வெயிலில் வருபவர்களுக்கு உடலுக்கு குளிர்ச்சி பானம் கொடுக்க வேண்டும் என்றால் இங்கே புத்துணர்ச்சியூட்டும் புதினா பானம் செய்முறையைக் கொடுத்துள்ளோம். இதன் சுவை அற்புதமாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. இது உடலை குளிர்விக்கவும் உதவுகிறது.
புதினா இலை இயற்கையாகவே குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கோடையில் உடலை உள்ளே இருந்து குளிர்விக்கிறது. எனவே வீட்டில் வெயிலில் இருந்து வெளியே வருபவர்களுக்கு, இந்த பானம் உடல் சூட்டை கட்டுப்படுத்தவும் உதவும். இது செய்வது மிகவும் எளிது. செய்முறையை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் புதினா இலைகள்
தேவையான அளவு உப்பு
கால் டீஸ்பூன் சர்க்கரை
2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
3 ஐஸ் க்யூப்ஸ்
சோடா
செய்முறை
முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸி சாரில் போட்டு அரைத்துஎடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது ஒரு டம்ளரில் அரைத்த புதினா இலைகளை போட்டு அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் சோடா அல்லது ஸ்பிரைட் சேர்க்கவும். அவற்றில் ஐஸ் க்யூப்ஸைச் சேர்க்கவும், சுவையான புதினா பானம் தயாராக உள்ளது.
விருந்தினர்கள் திடீரென வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு குளிர்பானங்களுக்கு பதிலாக இந்த புதினா பானத்தை கொடுங்கள். இது மிகவும் சுவையானது மட்டுமல்ல, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதும் கூட. டம்ளரில் பரிமாறும்போது பானத்தை சிறிது அலங்கரிப்பது நல்லது. டம்ளரின் வாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கருப்பு உப்பு சேர்த்து அலங்கரித்து பின்னர் பானத்தை பரிமாறவும். இது எளிய பானங்களையும் சிறப்பானதாக மாற்றும்.

டாபிக்ஸ்