National Tourism Day: சர்வதசே அளவில் புகழ் பெற்ற சுற்றுலதளமாக இருக்கும் இந்தியா.. தேசிய சுற்றுலா தினம் வரலாறு, பின்னணி
National Tourism Day 2025: இந்தியாவின் பல்வேறு விதமான அழகிய நிலப்பரப்புகள், நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாவானது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை பிரதிபலிக்கும் நாளாக தேசிய சுற்றுலா தினம் உள்ளது. சிறப்பு மிக்க இந்த நாள் குறித்த வரலாறு, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதை பார்க்கலாம்.

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான பயணத் தலமாக இந்தியா உள்ளது. அந்த வகையில் நாட்டின் தேசிய சுற்றுலா தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வகையான அழகிய நிலப்பரப்புகளையும் கௌரவிக்கவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாவின் மதிப்பு பற்றிய புரிதலை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் நிலைப்பாட்டில் இந்தியா சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, சுற்றுச்சூழல் சுற்றுலா, கப்பல் பயணங்கள், வணிகம், விளையாட்டு, கிராமப்புறம், கல்வி மற்றும் மருத்துவ பயணம் போன்ற பல்வேறு சுற்றுலா பயண அனுபவங்களை இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் அனுபவிப்பார்கள். பயணம் மற்றும் சுற்றுலா துறையில் பணிபுரியும் ஏராளமான மக்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வரலாறு முதல் முக்கியத்துவம் வரை, இந்த நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பார்க்கலாம்
தேசிய சுற்றுலா தினம் வரலாறு
தேசிய சுற்றுலா தினம் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை இந்த நாள் வருகிறது. இந்திய அரசாங்கம் முதன்முதலில் தேசிய சுற்றுலா தினத்தை 1948இல் கொண்டாடியதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் பிரபலமான சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதும், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.
இந்தியாவில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் அரசு திட்டங்களை சுற்றுலா அமைச்சகம் வகுக்கின்றன. இது மாநில, மத்திய மற்றும் தனியார் துறை அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுகிறது. சுற்றுலா நாள் உருவாக்கத்துக்கு பின்னர் 1950 மற்றும் 1960களில், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தியாவை சர்வதேச அளவில் சுற்றுலா தளமாக சந்தைப்படுத்தவும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய சுற்றுலா தினம் முக்கியத்துவம்
தேசிய மற்றும் உலகளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதில் சுற்றுலா வகிக்கும் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கம் குறித்த பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கவும், இந்த நாள் முயற்சிக்கிறது.
உள்ளூர் சமூகங்களுக்கு பயனளிக்கும் விதமாக நிலையான சுற்றுலா நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் உள்ள பல்வேறு பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் தனித்துவமான அனுபவங்கள் மற்றும் ஈர்ப்புகளை வெளிப்படுத்த ஏராளமான நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் இந்த நாளில் திட்டமிடப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது
தேசிய சுற்றுலா தினம் கருபொருள் 2025
"இந்தியாவின் காலத்தால் அழியாத அழகைக் கொண்டாடுதல்" தான் இந்த ஆண்டுக்கான தேசிய சுற்றுலா தினம் 2025க்கான கருபொருளாக உள்ளது. சுற்றுலாவானது பலரது வாழ்க்கையில் செழிப்பு, மகிழ்ச்சி, மன அமைதி, புத்துணர்வு போன்ற பல்வேறு நேர்மறையான விமர்சனங்களை கொண்டுவரும் ஆற்றலை கொண்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு விதமான அதிசயங்களை அதிகமான மக்கள் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக நாட்டின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவது பொருளாதார வளர்ச்சியையும் வளர்த்தெடுக்கும் என நம்பப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்