Nanjil Fish Gravy: தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா அரைத்து செய்யும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு! நாவில் எச்சில் ஊறும்!
Nanjil Fish Gravy: தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா அரைத்து செய்யும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு! நாவில் எச்சில் ஊறும் சுவையில் உங்களை அசத்தும், இப்படி செய்து பாருங்கள்.

நாஞ்சில் நாட்டு உணவுகள் என்பது சுவை நிறைந்ததாகவும், தமிழகம் மற்றும் கேரள மசாலாப்பொருட்களை சேர்த்து செய்வதாகும். இந்தியாவின் தென் கோடியில் நீங்கள் நாஞ்சில் நாட்டு உணவுகளை ருசிக்கலாம். அருகருகே இருக்கும் இம்மாநிலங்களின் சுவையை சேர்த்து தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ருசிக்கலாம். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் கன்னியாகுமரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள் நாஞ்சில் நாடு என்று அழைப்படுகிறது. அங்கிருந்துதான் இந்த உணவின் பெயர்கள் வந்தது. இந்த உணவுகள் கேரளா மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மசாலாக்களை சேர்த்து செய்வது. செய்முறையும் சேர்ந்திருக்கும். தமிழ்நாட்டின் மற்ற உணவு வகைகளைப்போல் நாஞ்சில் நாட்டு உணவு வகைகளுக்கும் என்று தனிச்சிறப்பு உண்டு. தனித்தன்மையான மற்றும் சூப்பரான சுவையைக் கொண்டது. இந்த ஊர்கள் பெரும்பாலும் கடற்கரையோரம் என்பதால் மீன் உணவுகள் மற்றும் தேங்காய் உணவுகள் இங்கு சிறப்பாக இருக்கும். இங்கு உள்ள மக்கள் காய்கறிகள், வெங்காயம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து உணவை சாப்பிடுகிறார்கள். சிவப்பரிசி, மட்டை அரிசி ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ