Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா! ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா! ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்! இதோ ரெசிபி!

Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா! ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jun 29, 2024 04:13 PM IST

Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா, ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் வகையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா! ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்!  இதோ ரெசிபி!
Mysore Chicken Curry : மைசூர் சிக்கன் மசாலா! ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்!  இதோ ரெசிபி!

சோம்பு – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

ஜாவித்திரி – 2

பட்டை – 2

பிரியாணி இலை – 2

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

சிக்கன் கிரேவி செய்ய

சிக்கன் – அரை கிலோ

எண்ணெய் – 50 மிலி

சோம்பு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலா – கால் ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு கைப்பிடி

செய்முறை

மைசூர் ஸ்டைலில் சிக்கன் கறி செய்வதற்கு தேங்காய் துருவல், சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய், ஜாவித்திரி, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய் என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர், கடாயில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக கொதித்த பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மையாகும் வரை வதக்கவேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.

கடைசியான மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். இதை சிறிது நேரம் மூடிவைத்து இறக்கினால், சூப்பர் சுவையான மைசூர் சிக்கன் மசாலா தயார்.

இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இது எளிதாக செய்யக்கூடியது என்பதால், நினைத்தவுடனே செய்துவிடலாம். காலையில் இதை செய்துவிட்டால் போதும். மதியம் சாதத்துக்கும் வரும். ஏதேனும் ஒரு சைட்டிஷ் அல்லது முட்டை ஆம்லேட் போட்டுக்கூட நீங்கள் ஒரு நாளை கடத்திவிடலாம்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.