மட்டன் சுக்கா : மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்வது பாருங்கள்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மட்டன் சுக்கா : மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்வது பாருங்கள்?

மட்டன் சுக்கா : மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்வது பாருங்கள்?

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 09:17 AM IST

மட்டன் சுக்கா : மதுரையில் நீங்கள் எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், பெரும்பாலும் மணப்பட்டி சமையல்தான் மணக்கும். அவர்களின் சிறப்பு மட்டன் சுக்காவை செய்வது எப்படி என்று பாருங்கள்.

மட்டன் சுக்கா : மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்வது பாருங்கள்?
மட்டன் சுக்கா : மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்வது பாருங்கள்?

தேவையான பொருட்கள்

• மட்டன் – ஒரு கிலோ

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• இஞ்சி – ஒரு இன்சி (இடித்து சேர்த்துக்கொள்ளவேண்டும்)

(ஒரு குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் இடித்த இஞ்சி சேர்த்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, 10 விசில் விட்டு கறியை நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

சுக்கா செய்ய தேவையான பொருட்கள்

• நெய் – ஒரு குழிக்கரண்டி

• சின்ன வெங்காயம் – ஒரு கப்

• முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு

• வர மிளகாய் – 4

• பூண்டு பல் – 25 (தோல் நீக்கி இடித்தது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

2. வெங்காயம் பொன்னிறமானவுடன், முந்திரி பருப்பு மற்றும்வர மிளகாயை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து நன்றாக இடித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

3. அது நன்றாக வதங்கியவுடன், குக்கரில் வேகவைத்த மட்டனை சேர்த்து, நன்றாக நெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.

4. தண்ணீர் நன்றாக பிரிந்து நெய் பிரிந்து வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கினால் மணமணக்கும் மணப்பட்டி ஸ்பெஷல் நெய் மட்டன் சுக்கா தயார்.

இதை சூடான சாதம், சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை, பூரி என சாதம் மற்றும் டிஃபன் என்று தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதில் கறிறை நன்றாக வேகவைத்து, பின்னர் மீண்டும் மசாலாக்களுடன் சேர்த்து கொதிக்க விடுவதால், கறி நல்ல சாஃப்ட்டாக வெந்து வரும்.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றதாகவும், சுவையானதாகவும் இருககும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை சாப்பிட்டு மகிழுங்கள்.