12 Benefits of Murungai Keerai : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!
Murungai Keerai Benefits : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும், முருங்கைக்கீரையில் உள்ள 12 நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

முருங்கைக்கீரை உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய்களைத் தடுக்கிறது. இந்த முருங்கைக்கீரை இந்திய உணவு வகைகளில் பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது. இதை வதக்கி சாப்பிடுகிறார்கள் அல்லது சூப், ரசம் அல்லது பச்சையான அரைத்து எடுத்துக்கொள்கிறார்கள். முருங்கைக்கீரையில் உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது உங்கள் உடலில் எண்ணற்ற உறுப்புகள் நன்றாக இயங்க உதவுகிறது. முருங்கைகீரையில் வைட்டமின்கள் ஏ, பி1 (தியாமின்) பி2 (ரிபோஃப்ளாவின்) பி3 (நியாசின்), வைட்டமின் சி (ஆஸ்கார்பிக் அமிலம்) ஆகியவை உள்ளன. இதில் உள்ள மினரல்கள் தவிர மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், சிங்க், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கைக்கீரையில் 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. செல் சேதத்தை குறைத்து, இதயநோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான்’
மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு பழமொழியாகும். முருங்கை இலை, உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை அல்லது கீரை. இதை உணவில் தினமும் பயன்படுத்தினால், அவர்கள் வயதானாலும் குச்சி ஊன்றி நடக்கவேண்டிய தேவையில்லை. அதைத்தான், முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான், முருங்கையை இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அது பல்வேறு நன்மைகளைத்தரும். இதனால் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வயதானாலும் குச்சியூன்ற தேவையில்லை என்பதை குறிக்கிறது.
முருங்கைக்கீரையின் நன்மைகள்
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
முருங்கைக்கீரையில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் மற்றும் தலைதுடி என அனைத்தையும் அதிகரிக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்கி, சருமத்திற்கு முருங்கை இலைகள் பளபளப்பைத்தருகிறது. சரும சுருக்கங்களைப் போக்குகிறது. இது தலையில் பொடுகைக் குறைக்கிறது. தலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுவைத்தருகிறது. இதனால் தலைமுடி வலுவாகிறது. முருங்கையிலை எண்ணெய் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. இதனால் அது முகப்பருவை கட்டுப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சருமத்துக்கு பளபளப்பைக் கொடுத்து, உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துகிறது.