Mullu Moringai Adai: முள்ளு முருங்கை கீரை ரொட்டி.. ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mullu Moringai Adai: முள்ளு முருங்கை கீரை ரொட்டி.. ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!

Mullu Moringai Adai: முள்ளு முருங்கை கீரை ரொட்டி.. ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Feb 09, 2024 04:14 PM IST

குழந்தைகளுக்கு இந்த முள்ளு முருங்கையில் தோசை, பூரி என பல வகையாக சமைக்கலாம். இந்த சத்தான முள்ளு முருங்கை இலை அடை செய்வது எப்படி என பார்க்கலாம். இது மிகவும் ருசியாகவும் இருக்கும். இனிப்பு சேர்த்து கொடுத்தால் முள்ளு முருங்கை அடையை குழந்தைகள் விரும்புவார்கள்.

முள்ளு முருங்கை இலை அடை
முள்ளு முருங்கை இலை அடை

முள்ளு முருங்கை அடை தேவையான பொருட்கள்

முள்ளு முருங்கை

அரிசி

வெங்காயம்

உப்பு

பச்சை மிளகாய்

இஞ்சி

கறிவேப்பிலை

உப்பு

சீரகம்

பெருங்காயம்

செய்முறை

முள்ளு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கைபிடி முள்ளு முருங்கை இலை சரியாக இருக்கும்.

ஒரு கப் அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். கூடவே முள்ளு முருங்கை இலையை அதில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். மாவை வலுவலுவென அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த மாவில் அரைக்கப் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு பச்சை மிளகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் சீரகத்தை கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அரைத்த மாவை அடை போல் தட்டி வேக விட வேண்டும். இரண்டு புறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் ருசியான முள்ளு முருங்கை அடை ரெடி.

இந்த முள்ளு முருங்கை அடையுடன் தேங்காய் சட்னி, அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு சீனி அல்லது நாட்டு சக்கரை சேர்த்து கொடுக்கலாம்.

இது உடலுக்கு மிகவும் நல்லது.

முள்ளு முருங்கையின் நமைகள்

ஆண்மையை பெருக்கு மூலிகையாக முள்ளு முருங்கை பார்க்கப்படுகிறது. 21 நாட்கள் முள்ளு முருங்கை இலையை உணவில் சேர்த்து கொண்டால் ஆண்மை பெருகும். மாதுளை சாறுடன் கசகசாவை பொடித்து அதனுன் முள்ளு முருங்கை இலை சாறு சேர்த்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது.

பெண்களின் கருப்பை பிரச்சனைகளை தீர்க்க உதவும். சீரற்ற மாத விடாய் உதிரப்போக்கு பிரச்சனை, கருப்பை கட்டி, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரசவத்திற்கு பின் தாய்பால் சுரப்பில் குறை இருந்தால் முள்ளு முருங்கை இலையை பெரியல் செய்து சாப்பிட்டலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இது செரிமானத்தை அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வு தரும்.