மொகாபத் சர்பத் : அடிக்கும் வெயிலுக்கு சில்லுனு மொகாபத் சர்பத் பருகலாமா? தர்ப்பூசணி வாங்கின இனி இப்படி செய்ங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மொகாபத் சர்பத் : அடிக்கும் வெயிலுக்கு சில்லுனு மொகாபத் சர்பத் பருகலாமா? தர்ப்பூசணி வாங்கின இனி இப்படி செய்ங்க!

மொகாபத் சர்பத் : அடிக்கும் வெயிலுக்கு சில்லுனு மொகாபத் சர்பத் பருகலாமா? தர்ப்பூசணி வாங்கின இனி இப்படி செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 11:19 AM IST

மொகாபத் சர்பத் : இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக தண்ணீர்ச் சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, மேலும் கலோரிகள் அதிகம் உட்கொள்ளாமல் தடுத்து உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.

மொகாபத் சர்பத் : அடிக்கும் வெயிலுக்கு சில்லுனு மொகாபத் சர்பத் பருகலாமா? தர்ப்பூசணி வாங்கின இனி இப்படி செய்ங்க!
மொகாபத் சர்பத் : அடிக்கும் வெயிலுக்கு சில்லுனு மொகாபத் சர்பத் பருகலாமா? தர்ப்பூசணி வாங்கின இனி இப்படி செய்ங்க!

தேவையான பொருட்கள்

• காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்

• ரோஸ் சிரப் – தேவையான அளவு

• சர்க்கரை – கால் கப்

• சப்ஜா விதைகள் – கால் கப் (தண்ணீரில் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

• தர்ப்பூசணி – 1 (மிகப்பொடியாக நறுக்கியது)

• ஐஸ் கட்டிகள் – சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

1. தர்ப்பூசணியை நீங்கள் மிகச்சிறிய துண்டுகளாக முதலில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.

2. அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, பால் சேர்த்து கலக்கவேண்டும்.

3. அடுத்து ரோஸ் சிரப்பை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். கலக்கும்போது, தர்ப்பூசணி உடைந்துவிடக்கூடாது. எனவே கவனமாக கலக்கவேண்டும்.

4. அடுத்து ஊறியுள்ள சப்ஜா விதைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை கலந்துகொள்ளவேண்டும். இதில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளைச் சேர்த்தால், சில்லென்ற மொகாபத் சர்பத் தயார்.

இதை வெயிலுக்கு பருகும்போது மிகவும் இனிமையாக இருக்கும். நீங்கள் எப்போதும் தர்ப்பூசணியை வாங்கி கட் செய்து சாப்பிடாமல் இதுபோல் சாப்பிட சுவையும் நன்றாக இருக்கும். வெயிலுக்கும் இதமானதாக இருக்கும். கோடைக் கால குளிர் பானங்களில் இந்த மொகாபத் சர்பத்தை செய்து சாப்பிட மறந்துவிடாதீர்கள். உங்கள் உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல, மனதுக்கு மகிழ்ச்சியையும் இந்த சர்பத் கொடுக்கும்.

தர்ப்பூசணியின் நன்மைகள்

தர்ப்பூசணியில் 90 சதவீதத்துக்கு மேல் தண்ணீர்ச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. குறிப்பாக கடும் கோடைக்காலங்களில் இதை நீங்கள் பருகலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்களும் உள்ளது. இதில் சிட்ருலைன் என்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள லைக்கோபென் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள உயர் நீர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடல் நல்ல முறையில் இயங்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பின்னர் தசைகளில் ஏற்படும் சோர்வைப் போக்க சிட்ருலைன் உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, லைக்கோபென் ஆகியவை சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது புறஊதாக் கதிர்களிடம் இருந்து சரும ஆரோக்கியத்தைக் காக்கிறது. கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள லைக்கோபென் மற்றும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக தண்ணீர்ச் சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, மேலும் கலோரிகள் அதிகம் உட்கொள்ளாமல் தடுத்து உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.