மாம்பழ புளிசேரி : நாவில் எச்சில் ஊறும் சுவையைக் கொண்ட கேரளா ஸ்பெஷல் மாம்பழ புளிசேரி! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாம்பழ புளிசேரி : நாவில் எச்சில் ஊறும் சுவையைக் கொண்ட கேரளா ஸ்பெஷல் மாம்பழ புளிசேரி! இதோ ரெசிபி!

மாம்பழ புளிசேரி : நாவில் எச்சில் ஊறும் சுவையைக் கொண்ட கேரளா ஸ்பெஷல் மாம்பழ புளிசேரி! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 11:13 AM IST

மாம்பழ புளிசேரி : கேரள ஸ்பெஷல் மாம்பழ புளிசேரியை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை மோர் கறி என்றும் அழைப்பார்கள். இதில் சேர்க்கப்படும் தேங்காய் எண்ணெய் இதற்கு தனிச் சுவையைக் கொடுக்கிறது. வேறு எண்ணெய்களைக் கொண்டும் இந்த மோர் கறியை நீங்கள் தயாரித்துக்கொள்ளலாம்.

மாம்பழ புளிசேரி : நாவில் எச்சில் ஊறும் சுவையைக் கொண்ட கேரளா ஸ்பெஷல் மாம்பழ புளிசேரி! இதோ ரெசிபி!
மாம்பழ புளிசேரி : நாவில் எச்சில் ஊறும் சுவையைக் கொண்ட கேரளா ஸ்பெஷல் மாம்பழ புளிசேரி! இதோ ரெசிபி! (elgi ultra )

தேவையான பொருட்கள்

• மாம்பழம் – 1 (தோல் நீக்கியது)

• பச்சை மிளகாய் – 2 (கீறியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• தயிர் – ஒரு கப் (அடித்தது)

அரைக்க தேவையான பொருட்கள்

• தேங்காய்த் துருவல் – அரை கப்

• பூண்டு – 3 பல்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• சீரகத் தூள் – அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• கடுகு – கால் ஸ்பூன்

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• வர மிளகாய் – 3

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கிய பொடியாக நறுக்கிய மாம்பழங்களையும் சேர்த்து மூடியிட்டு வேகவைக்கவேண்டும். தேவைப்பட்டால் இதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. தேங்காய்த் துருவல், சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. மாம்பழங்கள் வெந்தவுடன், அதில் அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கொதித்த பின் அனைத்தும் வெந்துவிட்டதா என்பதை உறுதிசெய்யவேண்டும். அடுத்து உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும். அது தளதளவென கொதிக்கவேண்டிய தேவையில்லை.

4. மற்றொரு பாத்திரத்தில் தயிரை அடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இதையும் வெந்துதயாராக உள்ள மாம்பழக்கலவையில் சேர்த்துவிடவேண்டும். இதை சேர்த்தபின் கொதிக்கவிடவேண்டிய தேவையில்லை. அந்த சூட்டிலேயே தயிர் நன்றாக வெந்துவிடும். ஆனால் நீங்கள் விரும்பினால் 5 முதல் 6 நிமிடங்கள் வேகவிடலாம்.

5. ஒரு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம், வர மிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும்.

6. இந்த தாளிப்பை கொதிக்கும் புளிசேரியில் சேர்த்து கலந்து இறக்கினால், சூப்பர் சுவையான மாம்பழ புளிசேரி தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.