மாங்காய் மோர் : வெயில் தாங்க முடியவில்லையா? மோர் பருகினால் நன்றாக இருக்குமா? இதோ ஸ்பெஷல் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாங்காய் மோர் : வெயில் தாங்க முடியவில்லையா? மோர் பருகினால் நன்றாக இருக்குமா? இதோ ஸ்பெஷல் ரெசிபி!

மாங்காய் மோர் : வெயில் தாங்க முடியவில்லையா? மோர் பருகினால் நன்றாக இருக்குமா? இதோ ஸ்பெஷல் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 10:05 AM IST

மாங்காய் மோர் : தற்போது வேறு சீசன்களில் மாங்காய்கள் கிடைத்தாலும் அவை சீசனில் கிடைக்கும் மாங்காய்கள் போல் சுவையானதாக இருக்காது. எனவே மாங்காய் சீசன் இருக்கும்போதே அவற்றை முயற்சித்துவிடுங்கள்.

மாங்காய் மோர் : வெயில் தாங்க முடியவில்லையா? மோர் பருகினால் நன்றாக இருக்குமா? இதோ ஸ்பெஷல் ரெசிபி!
மாங்காய் மோர் : வெயில் தாங்க முடியவில்லையா? மோர் பருகினால் நன்றாக இருக்குமா? இதோ ஸ்பெஷல் ரெசிபி!

தேவையான பொருட்கள்

• மோர் – ஒரு கப் (பசும் பாலில் தோய்த்து எடுத்த மோர் என்றால் அது மிகவும் நல்லது)

• மாங்காய் – 1

• பச்சை மிளகாய் – 2

• கல் உப்பு – தேவையான அளவு

• இஞ்சி – கால் இன்ச்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மல்லித்தழை – சிறிதளவு

• எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் மோரை மட்டும் தனியாக சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு சிறிய உரல் அல்லது உரல் ஏதேனும் ஒன்றில், மாங்காய், பச்சை மிளகாய், கல் உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சை பழச்சாறு என அனைத்தையும் சேர்த்து இடித்துக்கொள்ளவேண்டும்.

3. இரண்டுமே இல்லாதவர்கள் மிக்ஸியின் சிறிய ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் இரண்டு முறை அடித்துக்கொள்ளலாம். இதை மையாக அரையவிடக்கூடாது. ஒன்றிரண்டாகத்தான் இடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

4. இதை அடித்து வைத்துள்ள மோரில் கலந்து பருகவேண்டும். இதில் உங்களுக்கு வேண்டுமென்றால் ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஐஸ்கட்டிகள் சேர்க்காமல் செய்வதுதான் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் கூட. இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளி விடுமுறை காலங்களில் விளையாட வெளியே செல்லும் குழந்தைகளின் உடலில் நீர்சத்துக்கள் குறைந்துவிடும். அவர்களுக்கு இதுபோல் மோர் செய்து கொடுப்பது, உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க நல்லது. இதைச் செய்வதும் மிகவும் எளிது. கோடைக் காலங்கள்தான் இவற்றை செய்து பருகுவதற்கு ஏற்ற காலமும் ஆகும். ஏனெனில் நீங்கள் அப்போதுதான் மோரை அதிகம் பருகுவீர்கள். மாங்காயும் கிடைக்கும்.