மாநகரம் பட நடிகர் ஸ்ரீயா இது! இவருக்கு என்ன தான் ஆச்சு! இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ யின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்களால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியாகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே மாறி பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து போகின்றனர். இது போன்ற நிலையில் இருக்கும் நடிகர்களை சக நடிகர்கள் உதவி செய்து தேற்றுவார்கள். தற்போது இதே போன்ற நிலையில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு வந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான். ஸ்ரீ வெளியிட்ட போட்டோக்களில் சிலவற்றில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறப்பான நடிப்பு
நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று என சில படங்களில் மட்டுமே முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ஆனால் இந்த அனைத்து படங்களிலும் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதும் உண்மை தான். ஒவ்வொரு படங்களில் ஒவ்வொரு விதமான நடிப்பை காட்டியிருப்பார். வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது படத்தில் அப்பாவி இளைஞனாக காதல் வயப்படும் போதும், தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருப்பார்.
