அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ
சூரிய ஒளி, தூசி மற்றும் வியர்வை காரணமாக, முகத்துடன் கைகள் மற்றும் கால்களின் தோல் கருமையை ஆகிறது. இதை போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸியான அழகு குறிப்பு டிப்ஸ்களை பார்க்கலாம். வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய இந்த கிரீமை முகத்தில் தடவினால் உடனடி பலன் பெறலாம்

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், வெப்பம் காரணமாக தோல் பழுப்பு நிறமாகிவிடுகிறது. இதனால், முகம் கருப்பாக மாறி உயிரற்றதாகத் தெரிகிறது. முகத்தில் தோன்றும் பழுப்பு நிறத்தை அகற்ற பல்வேறு விதமான க்ரீம்களும், ப்யூட்டி பொருள்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் காசு கொடுத்து அழகு சாதன பொருள்கள் வாங்காமல், செலவு செய்து ப்யூட்டி பார்லர் போகாமல் வீட்டில் இருந்தபடியே முகத்தின் கருமை போக்கி இன்ஸ்டன்டாக பளபளப்பை பெற உதவும் க்ரீம் பற்றி தெரிந்து கொள்ளலாம்
தினமும் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனைப் பூசி, முகத்திலும் வாயிலும் ஸ்கார்ஃப் கட்டிய பிறகும், தூசி, அழுக்கு மற்றும் வியர்வை முகத்தின் பளபளப்பை மங்க செய்கின்றன. எனவே இதற்கு சரியான சாய்ஸாக முகத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்கும் கிரீமாக, உருளைக்கிழங்கு கிரீம் உள்ளது. சருமத்துக்கு பளபளப்பை தரும் இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இந்த கிரீம் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து கொள்ளலாம். வாரத்துக்கு மூன்று முதல் நான்கு முறை இதை தடவுவதன் மூலம் முகத்தில் பழுப்பு நிறத்தை நீக்குவது மட்டுமல்லாமல், முகத்து்கு பளபளப்பை பெறலாம்.