பாசிபருப்பு சாம்பார் : பாசிப்பருப்பு சாம்பார்; இது மட்டும் இருந்தால் போதும் ஈடு ஈடாக இட்லி காணாமல் போகும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பாசிபருப்பு சாம்பார் : பாசிப்பருப்பு சாம்பார்; இது மட்டும் இருந்தால் போதும் ஈடு ஈடாக இட்லி காணாமல் போகும்!

பாசிபருப்பு சாம்பார் : பாசிப்பருப்பு சாம்பார்; இது மட்டும் இருந்தால் போதும் ஈடு ஈடாக இட்லி காணாமல் போகும்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 03:18 PM IST

பாசிபருப்பு சாம்பார் : இது இட்லி, தோசைக்கு மட்டுமல்ல உப்புமா, பொங்கல் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இது இந்திய காலை உணவுக்கு சிறந்த சைட் டிஷ் ஆகும்.

பாசிபருப்பு சாம்பார் : பாசிப்பருப்பு சாம்பார்; இது மட்டும் இருந்தால் போதும் ஈடு ஈடாக இட்லி காணாமல் போகும்!
பாசிபருப்பு சாம்பார் : பாசிப்பருப்பு சாம்பார்; இது மட்டும் இருந்தால் போதும் ஈடு ஈடாக இட்லி காணாமல் போகும்!

தேவையான பொருட்கள்

• பாசி பருப்பு – ஒரு கப்

• புளி – சிறிதளவு

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

• பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

• கத்தரிக்காய் – 1 (பொடியாக நறுக்கியது)

• உப்பு – தேவையான அளவு

• பச்சை மிளகாய் – 1 கீறியது

• உருளைக்கிழங்கு – 1 (தோலை நீக்கி பொடியாக நறுக்கியது)

• சாம்பார் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வெந்தயம் – கால் ஸ்பூன்

செய்முறை

1. புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

2. குக்கரில் பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளை அனைத்தையும் ஒரே அளவாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும். அது பொரிந்தவுடன், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவேண்டும். அடுத்து தக்காளியைச் சேர்த்து நல்ல குழைவாக மசித்துக்கொள்ளவேண்டும். அடுத்து காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

5. அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவேண்டும். அனைத்தும் வெந்து வரவேண்டும். அனைத்து காய்கறிகளும் முக்கால் பதம் வெந்தவுடன், புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். இது 5 நிமிடங்கள் கொதிக்கவேண்டும். பச்சை வாசம் போனவுடன், சாம்பார் பொடியை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

6. அனைத்தும் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் வேகவைத்து, மசித்த பருப்பை சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சாம்பாரை கொதிக்கவிடவேண்டும். சாம்பார் கொதிக்க துவங்கியவுடன், மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான சாம்பார் தயார். இது டிஃபன் சாம்பார் ஆகும்.

7. இதை சூடான இட்லி, தோசை, உப்புமா, பொங்கலுடன் பரிமாற சுவை அள்ளும்.