லெமன் ஜிஞ்சர் ரசம் : லெமன் இஞ்சி ரசம்; குழைய வெந்த சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும்! ஊறுகாயும், அப்பளமும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  லெமன் ஜிஞ்சர் ரசம் : லெமன் இஞ்சி ரசம்; குழைய வெந்த சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும்! ஊறுகாயும், அப்பளமும் போதும்!

லெமன் ஜிஞ்சர் ரசம் : லெமன் இஞ்சி ரசம்; குழைய வெந்த சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும்! ஊறுகாயும், அப்பளமும் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 03:30 PM IST

லெமன் ஜிஞ்சர் ரசம் : இதற்கு தொட்டுக்கொள்ள பூண்டு ஊறுகாயும், அப்பளமும் இருந்தாலே போதும் சாதத்தை அள்ளி அள்ளி சாப்பீடுவீர்கள்.

லெமன் ஜிஞ்சர் ரசம் : லெமன் இஞ்சி ரசம்; குழைய வெந்த சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும்! ஊறுகாயும், அப்பளமும் போதும்!
லெமன் ஜிஞ்சர் ரசம் : லெமன் இஞ்சி ரசம்; குழைய வெந்த சாதத்தில் மசித்து சாப்பிட சுவை அள்ளும்! ஊறுகாயும், அப்பளமும் போதும்!

தேவையான பொருட்கள்

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• துவரம் பருப்பு – ஒரு கைப்பிடியளவு

• தக்காளி – 3

• பச்சை மிளகாய் – 2

• எலுமிச்சை – 1

• இஞ்சி – ஒரு இன்ச்

• மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• வெல்லம் – அரை ஸ்பூன் (பொடித்தது)

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. துவரம் பருப்பை குக்கரில் நன்றாக குழைய வேக வைத்துக்கொள்ளவண்டும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி மற்றும்சீரகத்தை சின்ன உரலில் சேர்த்து கொரகொரப்பாக இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. தக்காளியை நான்காக நறுக்கி, பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவேண்டும்.

4. அது பொரிந்தவுடன், பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கி, பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும்.

5. இதில் இடித்த இஞ்சி மற்றும் சீரகத்தைப் போட்டு நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர் வேக வைத்த துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவேண்டும்.

6. தக்காளி வெந்தபின் நீர் கொதித்து திரளும்போது அடுப்பை குறைவான தீயில் வைத்து எலுமிச்சை சாறை சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு இறக்கினால் சூப்பர் சுவை இஞ்சி, எலுமிச்சை ரசம் தயார்.

இது கமகமவென மணக்கும். குழைந்த சுடு சோற்றில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு தாராளமாக ரசம் ஊற்றி நொறுங்க பிசைந்து அப்பளம், வடகம் தொட்டுக் கொண்டு சாப்பிடவேண்டும்.

அவித்த முட்டை மசாலா, சூடான ஆம்லெட், சிக்கன், மட்டன் வறுவல், துவையல் என எதனோடு இணைந்தாலும் நன்றாக இருக்கும். பூண்டு ஊறுகாயும் அப்பளமும் சேர்த்து சாப்பிட சுவை அபாரமானதாக இருக்கும்.

வீட்டில் அசைவ விருந்து அல்லது அதிக அசைவ வகை உணவுகள் சமைக்கும்போது இந்த ரசமும் செய்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும். வயிற்று உபாதைகளை தடுக்கும்.

குறிப்பு

இந்த ரசத்திற்கு அரிசி கழுவிய நீரை சேர்த்தால் ருசி இன்னும் அபாரமாக இருக்கும்.

இந்த ரசத்தை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை சாப்பிட்டு ருசிக்க இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.