Endorphin Benefits: வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் எண்டோர்பின்..! இயற்கையாக அதிகரிக்க வழிகள் என்ன?
நீங்கள் வலியை உணரும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் உடலில் இருந்து வெளியாகும் ரசாயனமாக எண்டோர்பின் உள்ளது. வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் இதை இயற்கையாக அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாகவும், மன அழுத்தம் நிவாரணியாகவும் செயல்படுகிறது. இவை நமது மைய நரம்பு மண்டலம் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் வெளியிடப்படும் உடலின் ரசாயன தூதர்களாக செயல்படுகிறது. உடலில் ஏற்படும் வலியை நிர்வகிக்கவும், மகிழ்ச்சியை உணரவும் இந்த ஹார்மோன்களை வெளியிடப்படலாம்.
எண்டோர்பின் தரும் நன்மைகள்
நமக்கு ஏற்படும் காயம், மன அழுத்தம் அல்லது கவலையாக உணரும்போது, சுயமரியாதையை அதிகரிக்க வேண்டும் போன்ற சூழ்நிலைகளில் எண்டோர்பின்கள் வெளியாகிறது. செக்ஸ், காதல், சிரிப்பு அல்லது உடற்பயிற்சி போன்ற இன்பமான செயல்களின் போதும் அவை வெளியிடப்படுகின்றன. எண்டோர்பின்கள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கின்றன என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
எண்டோர்பின்கள் ஏன் முக்கியம்?
நமது உடலின் இயற்கையான முறையில் எண்டோர்பின்களை அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். அதிக எண்டோர்பின் அளவு வலியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இன்ப உணர்வுகளை அதிகரிக்கிறது.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வின் குறைக்கவும், சுயமரியாதையை மேம்படுத்தவும்
அறிவுசார் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கவும், வீக்கத்தைக் குறைத்து பசியை ஒழுங்குபடுத்தவும் செய்கிறது
இயற்கையாக எண்டோர்பின்களை அதிகரிப்பது எப்படி?
உடற்பயிற்சியில் ஈடுபடுவது
உடற்பயிற்சி செய்வதன் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இருப்பினும்,உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின்களின் உற்பத்தியைானது அதிகரித்து மனநல ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது. 30 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் எண்டோர்பின்கள் கணிசமான அளவில் வெளியேறும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தியானம்
உடலில் எண்டோர்பின் வெளியீட்டை அதிகரிக்க தியானம் ஒரு சிறந்த வழியாகும். தியானம் உங்கள் உடலை ஓய்வெடுக்க வைக்கிறது. அமைதியான நிலையை அடைய உதவுகிறது. தியானத்தின் பிற நன்மைகளாக ஆரோக்கியம் மற்றும் மனநிலையை மேம்படுத்துதல், நோயைச் சமாளிக்கும் திறனை அதிகரித்தல், தூக்க முறை மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை உள்ளன.
நறுமண எண்ணெய்கள் வாசனை நுகர்தல்
லாவெண்டர் போன்ற உங்களுக்கு பிடித்த நுறுமணம் மிக்க எண்ணெய்களை முகர்ந்து பார்ப்பதன் மூலம் எண்டோர்பின் வெளியீடானது தூண்டப்படும். உங்கள் சுற்றுப்புறத்தில் எண்ணெய்களின் நறுமணத்தைப் பரப்ப, டிஃப்பியூசரைப் பயன்படுத்தலாம். ரோஸ்மேரி, ஆரஞ்சு அல்லது திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் வாசனை திரவியங்கள் போன்றவையும் எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன
பாலியல் உறவு
ஆக்ஸிடாஸின் போன்ற பிற காதல் ஹார்மோன்களுடன் எண்டோர்பின்கள் உடலில் வெளியிடப்படுவதால், உடலுறவு உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருவதாக கூறப்படுகிறது. எண்டோர்பின்களின் அதிகரிப்பு, வலி நிவாரணியாக இருப்பதோடு, மன அழுத்தம் குறைதல் மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துதல் போன்ற நீங்கள் நன்றாக உணர உதவுகிறது.
ஒயின், டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் சாப்பிடுவது எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது, மகிழ்ச்சி உணர்வுகளை ஊக்குவிக்கிறது. மன அழுத்தம் அல்லது சோகத்தின் போது, சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் மனது ரிலாக்ஸ் ஆகி உங்களை நன்றாக உணர வைக்கும். அதேபோல் ஒயின் பருகுவதாலும் எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சத்தமாக சிரியுங்கள்
சத்தமாக சிரிக்கும்போது மனநிலை நன்றாக மாறுவதை உணரலாம். சிரிப்பு மூலம் கவலை அல்லது மன அழுத்தத்தின் தொடர்ச்சியான சுழற்சியில் இருந்து விடுபடுவீர்கள். அறிவுசார் நடத்தை சிகிச்சையில் சிரிப்பு சிகிச்சை என்று அழைக்கப்படும் ஒரு நுட்பம் உள்ளது, இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்