Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!

Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Mar 06, 2025 07:00 AM IST

Kidney Stone : சேரும் அதிகப்படியான உப்பு, பொட்டாசியம், கால்சியம், யூரியா போன்ற பல்வேறு தாதுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது தேவையற்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் படியத் தொடங்கும். இந்த படிமங்கள் தான் சிறு சிறு கற்கள் போல் மாறும்

Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!
Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!

சிறுநீரக கற்கள் என்பது இரு பாலருக்கும் எல்லா வயதினருக்கும் பொதுவானது. நமது உடலில் சேரும் அதிகப்படியான உப்பு, பொட்டாசியம், கால்சியம், யூரியா போன்ற பல்வேறு தாதுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. இந்த கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது இந்த தேவையற்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் படியத் தொடங்குகின்றன. இந்த படிமங்கள் தான் காலப் போக்கில் சிறு சிறு கற்கள் போன்ற அமைப்பாக மாறி விடுகிறது. தண்ணீர் குறைவாக குடிக்கும் போதும் உணவுப் பழக்கம் சிறுநீர் வெளியேற்றாமல் அடக்கி வைத்தல் போன்ற விசயங்களும் கற்கள் உருவாக காரணமாக அமைகிறது. காலப்போக்கில் அது பெரிய அளவில் மாறி விடும். சூழலில் சிறுநீர் குழாய்களின் வழியாக வெளியேற முடியாமல் போகிறது. இந்த மாதிரி நேரங்களில் தான் அதிக வலி குறிப்பாக கீழ் முதுகு வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படும். சிலருக்கு சிறுநீரோடு ரத்தமும் வெளியே வருவது உண்டு. கற்கள் அளவில் சிறியதாக இருக்கும் போது கடுமையான வலியோடு தானாகவே சிறுநீரில் வெளியேறுவதும் உண்டு.

சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள்

சிறுநீரக கற்கள் பிரச்சினைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. எந்த சிகிச்சையும் கல்லின் அளவு எண்ணிக்கை, வடிவம், கற்களின் வகை, கற்கள் இருக்கும் இடம் என்பதை பொறுத்து மாறுபடும். பொதுவாக கால்சியம் ஆக்சலேட் வகை கற்கள் அதிகமாக உள்ளது. இவை தவிர சிஸ்டைன் கற்கள் யூரிக் அமிலம் தொடர்புடையதாக உள்ள கற்கள் ஸ்ட்ரூவைட் கற்கள் போன்றவையும் உள்ளன. சிலருக்கு பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் கற்கள் உருவாகின்றன. சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டு படுத்து உருள்வதையும் காணலாம். சிலருக்கு வாந்தியும் ஏற்படும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் பல மருந்துகள் நோயாளிகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது. சுமார் எட்டு மில்லி மீட்டர் வரை உள்ள கற்களை ஹோமியோபதி மருந்துகள் மூலம் உடைக்கவும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றவும் முடிகிறது.

சிறுநீரக குழாய் பகுதியில் இது போன்ற கற்கள் சிறுநீர் வெளியேறும் பாதையில் தடையாக மாறும் போது சிறுநீர் வெளியேற்ற முடியாமல் திரும்பி உட்பகுதியில் திரும்பி விடுவதும் உண்டு. இந்த நிகழ்வை ஹைட்ரோ நெஃப்ரோஸிஸ் என்று குறிப்பிடுகிறோம். அறுவை சிகிச்சை என்பது முற்றிலும் தீர்வு என்று கூற முடியாது. கற்களை பொறுத்த வரையில் அதன் அமைப்பு அளவு அமைந்துள்ள இடம் என்ற விசயங்களை அடிப்படையாக வைத்தும் நோயாளிகள் வயது, தாங்க கூடிய சக்தி, எதிர்ப்பு சக்தி போன்ற விசயங்களை வைத்து ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ள செய்கிறோம். 

எட்டு மில்லி மீட்டர் வரை உள்ள கற்களை ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது எளிதாக உடைத்து கரைப்பான் மூலம் சீறுநீரக குழாய் பாதை வழியாக சிறுநீர் வழியாக வெளியேற்றவும் முடிகிறது. பெர்பரீஸ் வல்காரீஸ் என்ற மருந்தை இடது பக்க கற்களுக்கும், லைக்கோபோர்டியம் என்ற மருந்தை வலது பக்க கற்களுக்கும் கொடுக்கிறோம். ஹைட்ரான்ஜியா என்ற மருந்தை ஸ்டோன் பிரேக்கர் என்று சொல்கிறோம். எப்படியான கற்களையும் உடைத்து கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கேந்தாரிஸ் என்ற மருந்தை கடுமையான எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும் போது கொடுக்கலாம். பெரேரா பிரேவா என்ற மருந்தை சிறுநீர் வெளியேற மிகவும் சிரமப்படுவோருக்கு உதவுகிறது. அட்ரிகா யூரின் என்ற மருந்தை அதிக அளவில் யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கு உதவுகிறது. ஓசிமம் என்ற மருந்து வாந்தி மற்றும் வயிற்று வலி அதிகம் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த உதவுகின்றது. இதோடு லைக்கோ போர்டியம் சரசபெரிலா நக்சோமிக்கா என்று சில மருந்துகள் நடைமுறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வை நோக்கி செல்கிறது. இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு உணவு முறையிலும் கவனம் செலுத்தி வரும் போது நல்ல தீர்வு கிடைக்கும். 

தண்ணீர் அவசியம்

தண்ணீர் நன்கு எடுத்து கொள்வதும் அவசியம். பொதுவாக சிறுநீரக பாதையில் சிரமம் ஏற்படும் போது நாம் சுயமாக தற்காலிக தீர்வுகளை தேடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கற்கள் பெரிய அளவில் இருக்கும் போது தான் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உயிர் போகும் வலியால் துடித்துக் கொண்டு உருண்டு சிரமப்படும் நபர்கள் கூட முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டு அறுவை சிகிச்சையை தவிர்த்து இந்த பிரச்சினையில் இருந்து விடுபட ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன என்று நமக்கு நம்பிக்கை சேர்க்கிறார் மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி