Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!

Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Sep 29, 2024 02:51 PM IST

Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம். கல்யாணத்தில் மட்டும் ருசிக்கும் அவரைக்காய் கூட்டு ரெசிபி இதோ உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!
Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!

தேவையான பொருட்கள்

கடலை – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெந்தயம் – சிறிது

கொப்பரைத் தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 8 பல்

இஞ்சி – அரை இன்ச்

புளி – சிறிது

கஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அவரைக்காய் – கால் கிலோ

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தக்காளி – 2

செய்முறை

ஒரு கடாயில் வேர்க்கடலை, பட்டை, கிராம்பு, வரமல்லி, சீரகம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

அதை ஆற வைத்ததுக்கொள்ள வேணடும். அரைக்கும்போது அதனுடன் புளி, கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் உப்பும் சேர்த்து நல்ல மையாக தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பச்சை மிளகாய், தக்காளி என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக சுருள வறுபட்டு வந்தவுடன், அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய அவரைக்காயையும் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கினால், இதன் சுவையும், மணமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத்தூண்டும். இனி கல்யாணி விருந்து அவரைக்காய் கூட்டு சாப்பிட யாரும் கல்யாண வீட்டுக்குச் செல்லமாட்டார்கள். உங்கள் வீட்டுக்கு வருவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற சுவை மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.