Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி! கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி! கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்டும்!

Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி! கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்டும்!

Priyadarshini R HT Tamil
Jun 18, 2024 12:30 PM IST

Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி. கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்ட வேண்டுமெனில் இப்படி செய்ய வேண்டும்.

Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி! கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்டும்!
Kalyana Veetu Kara Chutney : கல்யாண வீட்டு கார சட்னி! கூடுதலாக இரண்டு இட்லி, தோசை சாப்பிட தூண்டும்!

உளுந்து – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 3

பூண்டு – 10 பல்

இஞ்சி – அரை இன்ச்

வர மிளகாய் – 10

புதினா – ஒரு கைப்பிடி

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – கால் கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

குண்டு மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

பொதுவாக கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் உணவுகள் சுவை நிறைந்ததாக இருக்கும். அதை நாம் வீட்டில் முயற்சித்தால் அத்தனை சுவை தராது. ஆனால் இந்த கல்யாண வீட்டு கார சட்னியை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்தால் உங்களுக்கு அதே சுவை கிடைக்கும்.

பொதுவாக சட்னி சுவையாக இருந்தால் இட்லி, தோசைகள் இரண்டு அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் இதுபோன்ற சுவையில் நீங்கள் சட்னி அரைக்கும்போது, கட்டாயம் அதிக இட்லி, தோசைகளை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சி, வரமிளகாய், புதினா, தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மிகவும் நைசாக அரைத்தால் நன்றாக இருக்காது. எனவே கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து அது சிவந்தவுடன், அதில் கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாள் சேர்த்து பொரியவிட்டு சட்னியில் சேர்க்கவேண்டும். கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான வெங்காயச் சட்னி ரெடி.

இதை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இரண்டு தோசை அல்லது இட்லி கட்டாயம் கூடுதலாக சாப்பிட தோன்றும். எனவே கட்டாயம் சாப்பிட்டு பாருங்கள்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.