சுழியம் போன்றது, ஆனால் இது வேறு பூரணம் பணியாரம்; சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்! இதோ ரெசிபி!
பூரணம் பணியாரம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
தேங்காய் – கால் கப்
பொட்டுக்கடலை – ஒரு கப் (மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்)
சர்க்கரை – ஒரு கப்
கசாசசா – ஒரு ஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் – ஒரு சிட்டிகை
பூரணம் செய்முறை
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானவுடன், அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன் சர்க்கரை, பொடித்துத்துள்ள பொட்டுக்கடலை மாவு சேர்த்து நனறாக கிளறவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் தனியான எள் மற்றும் கசகசாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து, கடைசியில் ஏலக்காய் தூவி இறக்கிவிடவேண்டும். கை பொருக்கும் சூட்டில் இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். இதை அப்படியே தனியாக வைத்துவிடவேண்டும்.
மாவு கரைக்க தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
உப்பு – கால் ஸ்பூன்
சர்க்கரை – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு தாராளமாக
செய்முறை
மைதா மாவில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், பூரணத்தை எடுத்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும். சூப்பர் சுவையான பூரணம் பணியாரம் தயார். இதை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு கொடுக்க குஷியாவார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும். அனைவரும் விரும்பும் இந்த பூரணம் பணியாரத்தை ஒருமுறை கட்டாயம் செய்து சாப்பிடுங்கள். நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள்.
மேலும் ஒரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டிலே சாட் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
சீரகம் – கால் கப்
மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
புதினா – 10 இலைகள் (காய்ந்தது)
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
அம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) – 2 டேபிள் ஸ்பூன்
(இது கடைகளில் கிடைக்கும்)
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
சுக்குப்பொடி – அரை ஸ்பூன்
கல் உப்பு – ஒரு ஸ்பூன்
ப்ளாக் உப்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன், அதில் சீரகத்தை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவேண்டும். அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவேண்டும்.
பின்னர், மிளகு, புதினா இலை என ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும்.
இப்போது அடுப்பை அணைத்து, வாணலியில் இருக்கும் சூட்டில் கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி, பெருங்காயம், மாங்காய் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவேண்டும்.
இப்போது, அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்தால் சாட் மசாலா வீட்டிலே தயார். இனி, வீட்டில் பஜ்ஜி, பக்கோடா, சிப்ஸ் என எந்த வகையான ஸ்நாக்ஸ் செய்தாலும் சாட் மசாலா தூவி சாப்பிட்டு மகிழுங்கள். அது மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். கடைகளில் உள்ள சாட் மசாலாக்களில் ப்ரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படும்.
வீட்டிலே நீங்கள் செய்யும்போது, இது எந்த சுவையூட்டிகள், மணமூட்டிகள் எதுவுமின்றி, ஆரோக்கியமானதாகக் கிடைக்கிறது. எனவே கட்டாயம் இதை வீட்டில் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை சூப்களில் கூட தூவிக்கொள்ளலாம். சாலட்களிலும் தூவி சாப்பிடலாம். எனவே கட்டாயம் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வீட்டிலே சாட் தயாரிக்கும்போதும் இந்த மசாலாவைத் தூவிக்கொள்ளலாம். பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா சன்னா, பிரட் சன்னா என அனைத்து சாட் ஐயிட்டங்களையும் நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்