HT Tour Special : சாகச சுற்றுலா பிரியரா? கிளம்புங்க கர்நாடகாவின் உயர்ந்த முல்லையநகரி சிகரத்துக்கு! மலையேறி மகிழுங்கள்!
HT Tour Special : மழைக்காலத்தில் முல்லையநகரி சிகரத்தில் நீங்கள் ஏறலாம். குறிப்பாக செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதத்தில் இங்கு செல்லலாம். அதிக காற்று, பனி, மழை என வழுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமான இருக்க வேண்டும்.

உயர்ந்த மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள் சூழ்ந்த, பச்சை புல்வெளி பாதை விரித்த பசுமை நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொட்டிக்கிடக்கிறது. 1,600 கிலோ மீட்டர் நீள மலைத்தொடரில் அரிய வகை தாவரங்களும், அதிக விலங்கினங்களும் நிறைந்து காணப்படுகிறது. மேற்கு கடற்கரை இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் கோவா என மாநிலங்களை கடந்து செல்லும் நீண்ட மலைத்தொடராகும். இதில் உள்ள முக்கிய மலைச்சிகரம் முல்லையநகரி சிகரமாகும்.
இதன் உயிரியல் பன்முகதன்மைக்காக உலகளவில் முக்கியத்துவம் பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர். இந்தியாவின் 27 சதவீத பூச்செடிகள் மற்றும் உள்ளூர் விலங்கினங்களின் புகலிடமாக உள்ளது.
பூகோள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அழிகியல் தன்மையை கொண்ட இந்த மலைத்தொடரில் மலையேற்றம் செய்வது ஒரு சுவாரஸ்மான சவால் நிறைந்ததாக உள்ளது. மலையேற்ற வீரர்களின் சொர்க்கமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் இமய மலைத்தொடர்களில் பல்வேறு இடங்கள் மலையேற்ற வீரர்களை கவரும் வகையில் இருந்தாலும், கர்நாடகாவில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உயர்ந்த சிகரம் முல்லையநகரி, சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சந்திர தோரணா மலைப்பகுதிகளில் உள்ள இந்த சிகரம் சிக்மகளூரில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் இடமாக உள்ளது.
பசுமை போத்திய மலைக்குன்றுகள், முல்லையநகரி மலையேற்ற சிகரம் சிக்மகளூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உங்கள் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.
முல்லையநகரி மலையேற்றம் சர்பதாரி பஸ் நிறுத்தத்தில் இருந்து துவங்குகிறது. சிக்மகளூருவை சாலையில் இணைக்கிறது. சிக்மகளூரில் இருந்து எளிதாக சென்று வரக்கூடிய இடமாக இது உள்ளது. இதில் மலையேற 3 கிலோ மீட்டர் தூரம் ஒன்றரை மணி நேரம் ஆகிறது.
சில செங்குத்தான ஏற்றங்களை தவிர மற்ற இடங்களை எளிதாக ஏறிவிட முடிகிறது. கடுமையான வனப்பகுதிக்குள் நீங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், சில நேரங்களில் வன விலங்குகளை சந்திக்க நேரிடும். பாம்பு வனத்தின் வழியாக செல்ல நேரிடுவதால் நீங்கள் பத்திரமாகவும் செல்ல வேண்டும். உயரமான மலை சிகரம் கத்தி முனை போல் இருக்கும். செங்குத்தான பாறைகளை கடக்கும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது கத்தி முனையில் நீங்கள் நடப்பதை போன்ற உணர்வை கொடுக்கும்.
முல்லையநகரி என்ற பெயர், முல்லையப்பசாமி என்ற புனிதரின் பெயரால் ஏற்பட்டது. அந்த துறவி முல்லையநகரி மலைகளில் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. சிக்மகளூர் செல்பவர்கள் அதிகம் செல்லும் இடமாக இந்த முல்லையநகரி உள்ளது. சிக்மகளூரில் உள்ள மற்ற மலையேற்ற இடங்கள், பாபா புதன்கிரி (12 கி.மீ), மணிக்யாதாரா அருவி (9 கி.மீ) மற்றும் தேவிரம்மா கோயில் (13 கி.மீ) ஆகியவை ஆகும். இங்கு இரவு தங்கலாம். ஆனால் இங்கு கழிவறை வசதிகள் கிடையாது.
மழைக்காலத்தில் முல்லையநகரி சிகரத்தில் நீங்கள் ஏறலாம். குறிப்பாக செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதத்தில் இங்கு செல்லலாம். அதிக காற்று, பனி, மழை என வழுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமான இருக்க வேண்டும்.
சர்பதாரிக்கு செல்வது எப்படி? மலையேற்றம் துவங்கும் இடம்
மலையேற்றம் துவங்கும் இடம், சர்பதாரி, சிக்மகளூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சிக்மகளூருவுக்கும், பெங்களூருவுக்கும் இடையே 242 கி.மீ. தொலைவு உள்ளது. முல்லையநகரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரில் இருந்து சாலை வழியாக சிக்மகளுருக்கு செல்ல நிறைய பஸ் வசதிகள் உள்ளது. சிக்மகளூருவை அடைந்தவுடன் நீங்கள் உள்ளூர் பஸ்ஸில் செல்லலாம் அல்லது ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, சர்பதாரிக்கு செல்ல முடியும்.
நீங்கள் கர்நாடகாவின் எங்கிருந்தாலும் வந்தாலும், சிக்மகளூருவை அடைந்ததும், பாபா புதன்கிரி சாலை வழியாக செல்லுங்கள். கைமாரவின் இடது பக்கம் சென்று, ஓய் கட்டில் இடது வழியில் சென்றால் நீங்கள் முல்யைநகரி சிகரத்தை அடையலாம். அரை கிலோ மீட்டர் தொலைவில் இடது பக்கத்தில் ஒரு சிறிய வளைவில் சர்பதாரி, மலையேற்றம் துவங்கும் இடம் வந்துவிடும். சிக்மகளூருவில் நீங்கள் முக்கியமாக செல்ல வேண்டிய இடம் முல்லையநகரி சிகரம். தென் இந்தியா சுற்றுலா வருபவர்கள் இங்கு கட்டாயம் வருவார்கள்.
எந்த மலையேற்றமும் உங்கள் இதயத்துக்கு நல்லது. மலையேற்றத்துக்கு நீங்கள் தயாராக வேண்டும் என்றால், நீங்கள் தினமும் ஓட்டப்பயிற்சி செய்திருக்க வேண்டும். 20 நிமிடத்தில் 4 கிலோமீட்டர் தூரம் உங்களால் ஓட முடிய வேண்டும். எந்த மலையேற்றத்திற்கு செல்லும் முன்னும், உங்களுக்கு பயிற்சிகள் தேவை. நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நிறைய முறை படிகளில் ஏறுவதும் உங்களுக்கு மலையேற்றத்திற்கு உதவும். சில பயிற்சிகளுடன் மலையேற்றத்திற்கு தயாராகி இந்த சிகரத்தில் ஏறி உங்கள் சாகச பயண தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்.
