HT Tamil Exclusive : HMPV ஒன்றும் கொரோனா அளவுக்கு பெரிய சீன் இல்ல.. ஈசியா ஓட ஓட விரட்டலாம்.. ஹோமியோபதி மருத்துவர் தகவல்!
HT Tamil Exclusive : கொரோனா கால கட்டத்தில் அலோபதி மருத்துவம் தாண்டி பல வைத்திய முறைகளை மக்கள் தேடினார்கள். அதில் ஹோமியோபதி மருத்துவத்திலும் நல்ல பலன்கள் கிடைத்தது. புதியதாய் பேசுபொருளாகி உள்ள இந்த வைரஸ் குறித்து பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி பல விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தார்.

HT Tamil Exclusive : கடந்த 2020 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய வார்த்தை என்பது கொரோனா.. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி மனித குலத்தை நடுக்க வைத்து மன உறுதியை உடைத்து எறிந்த வைரஸ். அந்த அலை அடங்கி அமைதியாகவே மூன்று வருடங்கள் தாண்டி விட்டது. இப்போது மீண்டும் அதே சீனாவில் இருந்து அலற வைக்கும் ஒரு சொல் HMPV.. அதாவது மனித மெட்டாநியூமோ வைரஸ். இதுவும் கிட்டத்தட்ட கொரோனாவைப் போன்றே மனிதர்களின் சுவாச மண்டலத்தில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் மக்களின் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது என்றே கூறலாம்.
கொரோனா கால கட்டத்தில் அலோபதி மருத்துவம் தாண்டி பல்வேறு வைத்திய முறைகளை மக்கள் தேடினார்கள். அதில் ஹோமியோபதி மருத்துவத்திலும் நல்ல பலன்கள் கிடைத்தது. அது போலவே புதியதாய் பேசுபொருளாகி உள்ள இந்த வைரஸ் குறித்து மதுரையை சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்களிடம் உரையாடிய போது பல்வேறு விதமான விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தார்.
அச்சம் வேண்டாம்
இந்த HMPV வைரஸ் குறிப்பாக மனிதர்களின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ப்ளூ நோய் போலவே இதன் அறிகுறிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மிக சிறிய குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களிடையே தான் மிகவும் எளிதாக இந்த நோயின் தொற்று அதிக அளவில் உள்ளது.
இது முன்னரே உள்ள வைரஸ் தான் என்ற போதிலும் சீனாவில் அதிக அளவில் தற்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து இருமும் போதும், தும்மும் போதும், பேசும் போதும் வெளியே தெறித்து வரக்கூடிய மிக நுண்ணிய நீர்த்திவலைகள் மூலம் காற்றில் கலந்து மற்றவர்கள் சுவாசிக்கும் போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணமாக அமைகிறது. இதற்கு பெரிதாக அச்சம் அடைய வேண்டிய அவசியம் இல்லை
ஆனால் கொரோனா அளவுக்கு மக்கள் அச்சமடைய எந்த அவசியமும் இல்லை. இந்த நோயின் பரவலை நாம் மாஸ்க் அணிந்து கொள்வதன் மூலம் வெகுவாக தடுக்க முடியும். பொதுவாக மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்வது பாதுகாப்பான ஒன்றாகும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதாக இந்த தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான உணவு பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுண்டல், பாசிப்பயறு, முட்டை, கீரை, நான் வெஜ் உணவுகள் மற்றும் சூப் எடுத்து கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த நோயின் அறிகுறிகள் நாம் அறிந்து வைத்திருக்க கூடிய ஃப்ளூ காய்ச்சலை ஒத்தே இருக்கிறது. மூக்கு அடைப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், இளைப்பு, லேசான காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி வலி போன்ற பிரச்சினைகளை தான் உருவாக்குகிறது.
ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு உண்டா
இந்த நோய்க்கான தீர்வில் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்ந்த பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்தை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா உச்ச கட்டத்தில் இருந்தபோது ஆர்சனிக் ஆல்பம் மிகவும் முக்கியமான மருந்தாக பங்காற்றியது. இந்த அறிகுறிகளும் அதையொட்டி இருப்பதால் ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்தை எடுத்துக் கொண்டாலே போதுமானது. இருமல் அதிகமாக இருக்கும் போதும், இருமி நெஞ்சு வலிக்கும் போதும் அடுத்த கட்டமாக பிரையோனியா ஆல்பம் மிகவும் சிறப்பாக செயலாற்றும் மருந்தாக இருக்கும்.
மூக்கடைப்பு மிகவும் அதிகமாக இருக்கும் போதும் சளி பச்சை மஞ்சள் நிறத்தில் வெளியேறும் போது பல்செட்ரிலா என்ற மருந்து பயன் தரும். சளியின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் காலி பைட் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நோ பெரம்பாஸ்போரிகா 6X, கல்கேரியாபாஸ்போரிகா 6X, அல்பா ஆல்பா டானிக், பயோகெம் டானிக், போன்ற பல்வேறு ஹோமியோபதி மருந்துகளை நோயாளிகளின் தன்மைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொடுப்பதன் மூலம் மிகவும் எளிதாக இந்த பிரச்சினைகளில் இருந்து குணம் அடையலாம்.
இந்த மாதிரி அறிகுறிகள் ஏற்படும் போதே ஹோமியோபதி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதாக குணமாகும் என்று நமக்குள் பெரிய நம்பிக்கையை விதைக்கிறார் ஹோமியோபதி டாக்டர் ம.ஜானகி.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்