Sexual Impotence: அலற வைக்கும் ஆண்மைக்குறைவு பிரச்சினை.. ஓட ஓட விரட்ட ஒரே ஜூஸ்! - செய்முறை இங்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sexual Impotence: அலற வைக்கும் ஆண்மைக்குறைவு பிரச்சினை.. ஓட ஓட விரட்ட ஒரே ஜூஸ்! - செய்முறை இங்கே!

Sexual Impotence: அலற வைக்கும் ஆண்மைக்குறைவு பிரச்சினை.. ஓட ஓட விரட்ட ஒரே ஜூஸ்! - செய்முறை இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 23, 2024 02:21 PM IST

சரி, இதையெல்லாம் நான் சரிவர பராமரித்து வந்தாலும், இரவு நேரங்களில் விந்து வெளிப்பட்டு விடுகிறது என்று புலம்புவார்கள்.

 ஆண்மையை அதிகரிக்க செய்ய குடிக்க வேண்டிய பானம்!
ஆண்மையை அதிகரிக்க செய்ய குடிக்க வேண்டிய பானம்!

அதற்கான காரணத்தை ஆராயும் பொழுது, அவர்கள் நீண்ட நாட்களாக சுய இன்பம் செய்தவர்களாகவும், இரவு வேளையில் சரிவர தூங்காதவர்களாகவும், காலம் கடந்து திருமணம்  செய்து கொண்டவர்களாகவும், சர்க்கரை வியாதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்குபவர்கள் முதலில் அவர்களுடைய தன்னம்பிக்கையை இழப்பார்கள். அத்துடன், கூட்டத்தில் செல்வதற்கு பயம்; தனிமையாகவே இருத்தல், சமூகத்தில் ஒன்றிணைந்து வாழாமல் ஒதுங்கி இருத்தல் உள்ளிட்டவற்றில் சிக்குவார்கள். 

சரி, இதையெல்லாம் நான் சரிவர பராமரித்து வந்தாலும், இரவு நேரங்களில் விந்து வெளிப்பட்டு விடுகிறது என்று புலம்புவார்கள். 

பொதுவாக ஆண்களுக்கு அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை ஆண்மைக்கான ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதன் வீரியத்தை, அவர்கள் காலை சிறுநீர் கழிக்கும் போது உணரமுடியும். 

அப்படி உங்களால் உணர முடியவில்லை என்றால், உங்களுக்கு ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள் இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த மாதிரியான அறிகுறி கொண்டவர்கள், ரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் இருக்கிறதா, நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பலவீனம் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும். 

காரணம் என்னவென்றால் நரம்பில் பிரச்சினை இருக்குமானால்,  எப்போதும் பதட்டமாகவே இருத்தல், கை நடுக்கம் உள்ளிட்டவை ஏற்படும். 

நீங்கள் இந்த காலத்தில் வயகரா மாத்திரை பற்றி அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வயகரா மாத்திரை என்ன செய்கிறது, நம்முடைய இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, ரத்தத்தை வேகமாக செலுத்தும். 

அதை நாம் சாப்பிடும் பொழுது, நம்முடைய ஆண்மைத்தன்மையானது வீரியம் கொண்டதாக மாறும். ஆகையால் ஆண் மகன்கள், தங்களுடைய இருதயத்தை முதலில் பலப்படுத்த வேண்டும். 

அந்த வகையில், நம்முடைய இருதயத்தை எந்தெந்த உணவுகளெல்லாம் வலிமைப்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்

ரத்த சிவப்பணுக்களை சத்துள்ளதாக வைத்துக்கொள்ள அயன் மற்றும் புரோட்டின் அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

எடுத்துக்காட்டாக பேரிச்சம்பழம், கீரை வகைகள், மாமிச கல்லீரல், பால் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

சுத்தமான பாலில், அதிகமான புரோட்டீன் இருக்கிறது பேரிச்சம் பழத்தில் அயன் சத்து இருக்கிறது. இதை நீங்கள் ஒன்றாக சாப்பிட்டால், உங்கள் உடல் பலமானதாக மாறும்.

இந்த ஊட்டச்சத்து சார்ந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது. இது உங்கள் உடல் முழுக்கவும் சென்று சேர வேண்டும். அதற்கு உதவுவதுதான் நைட்ரஸ் ஆக்சைடு!

பீட்ரூட், தர்பூசணி, மாதுளை, வெள்ளைப்பூண்டு, மிளகு ஆகியவற்றை அரைத்து ஜூஸாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் குடிக்கும் பொழுது, உங்களுடைய இரத்த குழாய்கள் விரிவடைந்து எல்லா பக்கமும் ரத்தம் சரிவர செல்லும். இதையெல்லாம் விடவும் மிக முக்கியமான ஒன்று எக்காரணத்திற்கொண்டும் இரவு நேர தூக்கத்தை தவிர்க்கவே கூடாது.

நன்றி மருத்துவர்: யோகவித்யா!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: