கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் சில வழிமுறைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் சில வழிமுறைகள்!

கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் சில வழிமுறைகள்!

Suguna Devi P HT Tamil
Published Apr 11, 2025 06:00 AM IST

கோடைக் காலத்தில் கடுமையான வெயில் காரணமாக தலை முடி வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை சரி செய்ய முடியை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் முடியை மேன்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் சில டிப்ஸ்கள் பின்வருமாறு.

கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் வீட்டு வைத்திய முறைகள்!
கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் வீட்டு வைத்திய முறைகள்!

தினமும் குளிக்க கூடாது

கோடை காலத்தில் தினமும் தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். பொதுவாக ஷாம்பு உங்கள் தலைமுடியிலிருந்து அழுக்கு மற்றும் வியர்வையை நீக்குகிறது, ஆனால் அது உங்கள் தலைமுடியிலிருந்து சருமத்தையும் நீக்குகிறது. சருமம் என்பது உங்கள் தலைமுடியை பராமரிக்கும் நம்பகமான மூலமாகும். இதனை சரிசெய்ய இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிப்பது உங்கள் தலைமுடியை மென்மையாக பராமரிக்க உதவும்.

சூடான தண்ணீரில் குளிக்க கூடாது

எப்போதும் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் தலைமுடியை வெந்நீரில் கழுவுவது முடியின் மேற்புறச் சுவரைத் திறக்கிறது. மறுபுறம், குளிர்ந்த நீர் மேற்புறச் சுவரை மூடி, இழைகள் தட்டையாக இருக்க ஊக்குவிக்கிறது. எனவே சூடான தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.

முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம்

தலைக்கு குளித்த முடித்த உடன் நாம் முடியை உலர்த்த துண்டை பயன்படுத்துகிறோம். துண்டை முன்னும் பின்னுமாக தேய்ப்பதால் உராய்வு ஏற்படுகிறது, இது நம் தலைமுடியின் வெளிப்புற அடுக்கான க்யூட்டிகல் எனும் முடிச்சுகளை உடைக்க வழிவகுக்கும். இதற்கு துண்டை மென்மையான பருத்தி டி-சர்ட்டை பயன்படுத்தவும். மாற்றவும். அதை உங்கள் தலைமுடியின் முனைகளில் சுற்றி, மெதுவாக தண்ணீரை பிழிந்து எடுக்கவும். பின்னர், வேர்கள் முதல் முனைகள் வரை, தேய்க்காமல் தட்டவும். இது உங்கள் தலைமுடி உடைவதைத் தடுக்கிறது மற்றும் வறட்சியாகமால் பாதுகாக்கிறது.

வீட்டு வைத்தியங்கள்

வறண்ட முடியை மென்மையாக்க உதவும் இயற்கை மூலங்களில் ஆளி விதை சிறப்பான ஒரு பொருளாகும். இதற்கு 2 டீஸ்பூன் ஆளி விதையை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இவை நன்கு சூடான பின்னர் வடிகட்டி அந்த கூழை மட்டும் எடுக்கவும். இதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து முடி முழுவது தடவி ஊற வைத்து குளிக்கவும். இது உங்கள் கூந்தலை மென்மையாக்குவது மட்டும் அல்லாமல் பளபளப்பையும் தரும். அடுத்ததாக கற்றாழை, தேங்காய் எண்ணெய் போன்றவையும் முடியின் பளபளப்பை கொண்டு வர உதவுகிறது.