Vegetable Soup: இந்த ஒரு சூப் போதும்! சளி தொந்தரவே வராது! ஊட்டச்சத்து அளிக்கும் காய்கறி சூப் செய்வது எப்படி? மாஸ் ரெசிபி
Vegetable Soup: நமது உணவு முறை வாயிலாகவே உடலின் பிரச்சனைகளை தீர்க்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழி தான் சூப், இதில் பல நன்மைகள் உள்ளன. அதிலும் காய்கறிகள் சேரக்கப்பட்ட சூப் குடித்தால் போதும். உடலின் பெரும்பாலான பிரகச்சனைகள் தீரும். சுவையான காய்கறி சூப் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

குளிர் காலத்தில் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். வெப்பநிலை குறைவாக உள்ள காரணத்தால் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனை சரி செய்ய நாம் மருத்துவர்களை நாடுவது உண்டு. ஆனால் நமது உணவு முறை வாயிலாகவே உடலின் பிரச்சனைகளை தீர்க்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழி தான் சூப், இதில் பல நன்மைகள் உள்ளன. அதிலும் காய்கறிகள் சேரக்கப்பட்ட சூப் குடித்தால் போதும். உடலின் பெரும்பாலான பிரகச்சனைகள் தீரும். சுவையான காய்கறி சூப் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
1 டேபிள்ஸபூன் வேக வைத்த துவரம் பருப்பு
2 கிராம்பு
2 ஏலக்காய்
ஒரு சிறிய துண்டு பட்டை
1 டீஸ்பூன் இஞ்சி
5 பற்கள் பூண்டு
ஒரு கைப்பிடி அளவு புதினா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
கால் கப் சின்ன வெங்காயம்
4 தக்காளி
2 பச்சை மிளகாய்
2 கேரட்
5 பீன்ஸ்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் -
1 டேபிள்ஸபூன் நெய்
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு புளி
எலுமிச்சை சாறு
தேவையான அளவு உப்பு
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
முதலில் துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதை கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதில் வேகவைத்து மசித்த காய்கறிகளை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து அதில் கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றவும். புளி தண்ணீருடன் மேலும் 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தப் பிறகு பொடித்து வைத்திருக்கும் தூள் வகைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். சூப் சிறிது ஆறியதும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும். சுவையான வெஜிடபுள் சூப் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம். நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

டாபிக்ஸ்