Pongal Muruku: ஒரு கடி முறுக்கு.. ஒரு கடி பொங்கல்.. பொங்கலுக்கு உளுத்தம்பருப்பு முறுக்கினை தயார் செய்வது எப்படி?
Pongal Muruku: ஒரு கடி முறுக்கு.. ஒரு கடி பொங்கல்.. பொங்கலுக்கு உளுத்தம்பருப்பு முறுக்கினை தயார் செய்வது எப்படி? என்பது குறித்துப் பார்ப்போம்.

Pongal Muruku: பொங்கல் என்ற அறுவடைத் திருவிழா வந்துவிட்டாலே கிராமங்கள் மற்றும் நகரங்கள் எல்லாம் புதுப்பொலிவு பெறுகின்றன.
இந்த ஆண்டின் முதல் பாரம்பரியப் பண்டிகை, பொங்கல். பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்து இடங்களிலும் மும்முரமாக நடந்து வருகின்றன.
வீடுகளைச் சுத்தம் செய்வது ஆகட்டும், வீட்டின் மதில்களுக்கு வண்ணம் தீட்டுவதாகட்டும் அனைத்துப் பணிகளும் பொங்கலுக்கு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தத் திருவிழா ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. அது கொண்டாடப்படும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த திருவிழாவிற்காகப் பல்வேறு நொறுக்குத்தீனி மற்றும் இனிப்புகளை ஒவ்வொருவரும் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொங்கல் வைத்தபின் சூரியனுக்கு நாம் தயாரித்த உணவைப் படைத்து வழிபடுவது ஒரு மரபு. அந்த மரபிற்காகவும் சிலர் இந்த தின்பண்டங்களைத் தயாரிப்பதுண்டு.
அப்படி, பொங்கலுக்காகப் பல்வேறு தின்பண்டங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த மரபு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகியப் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கிறது. அப்படி ஒரு தின்பண்டம் தான், முறுக்கு.
பொதுவாகவே முறுக்கு பலருக்குப் பிடித்தமான நொறுக்குத்தீனி. அதனாலேயே பொங்கல் மட்டுமின்றி, தீபாவளியில் முறுக்கு பலரது இல்லங்களில் சுடப்படுவதுண்டு.
நாம் பெரும்பாலும் அரிசி மாவில் இருந்து செய்யப்பட்ட முறுக்கினைத் தான் சாப்பிட்டிருக்கிறோம்.
உளுத்தம் பருப்பை பயன்படுத்தி செய்த முறுக்கினைப் பற்றித் தெரியுமா?. அதை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
உளுத்தம்பருப்பு முறுக்கினை தயார் செய்யத்தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு - 1 கப்
- அரிசி மாவு - 2 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 கப்
- எள் - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க
- உப்பு - சுவைக்கேற்ப
உளுத்தம்பருப்பு முறுக்கினை தயாரிப்பது எப்படி?:
- உளுத்தம் பருப்பை 2-3 முறை கழுவி, சிறிது தண்ணீர் சேர்த்து 5-6 முறை விசில் வரும் வரை குக்கரில் சமைக்கவும்.
- குக்கர் ஆறியதும், உளுத்தம்பருப்பை மசித்து ஒரு ஜாடியில் சேர்த்து அரைக்கவும்.
- வறுத்த கொண்டைக்கடலையைஅந்த மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பெரிய கிண்ணத்தில், அரிசி மாவு, ஓமம், வெள்ளை எள், ஓமப்பொடி, சீரகம், நசுக்கிய வறுத்த கடலை ஆகியவற்றைச்சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதில் 2-3 ஸ்பூன் சூடான எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த அரிசி மாவு கலவையில் துருவிய உளுத்தம் பருப்பு கலவையை சேர்த்து மாவினை கடினமாக பிசையவும்.
- மாவு பிழியும் ரோலில் ஒட்டாமல் இருக்க சுற்றிலும் சிறிது எண்ணெயைத் தேய்த்து, முறுக்கு மாவினை பிழியவும்.
- ஒரு பிளாஸ்டிக் தாளில் முறுக்கு போன்று செய்து எண்ணெயில் சேர்க்கவும் அல்லது நேரடியாக எண்ணெயில் விடவும்
- முறுக்கினை தீயில் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- சிறிது நேரத்தில் அதனை எடுத்து வாளி போன்ற பாத்திரத்தில் சேகரிக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவையான முறுக்கு உண்பதற்கு ரெடி.
- இதனைப்பொங்கலின்போது, முதல் நாளான சூரியப் பொங்கலின்போது, படைத்துவிட்டு உண்பர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்