பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!

பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!

Suguna Devi P HT Tamil
Published Jun 06, 2025 02:55 PM IST

அவசரமான சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி பருப்பு குழம்பு இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!
பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1 நறுக்கியது

தக்காளி - 3 நறுக்கியது

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கல்லுப்பு - 1 தேக்கரண்டி

புளி தண்ணீர்

தண்ணீர்

தாளிக்க

நெய் - 3 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 3

பூண்டு - 5 பற்கள்

பெருங்காயத்தூள்

கறிவேப்பிலை

உப்பு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் பிரஷர் குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். குக்கரை மூடி, வெயிட் வைத்து 5 விசில் வரும் வரை சமைக்கவும். 5 விசில் வந்த பிறகு, அடுப்பை அணைத்து, அழுத்தம் வெளிவரும் வரை காத்திருக்கவும்.

குக்கரைத் திறந்து சமைத்த பருப்பை மசிக்கவும். மசித்த பருப்பை தனியாக வைக்கவும். ஒரு கடாயில், நெய், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பூண்டு பற்களை தோலுடன் சிறிது நசுக்கி வறுக்கவும். கடுகு பொரிய ஆரம்பித்தவுடன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். சமைத்த மற்றும் மசித்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் சமைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து மீண்டும் கலக்கவும். சுவையான தக்காளி பருப்பு சூடாக பரிமாற தயார்.