வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!
இந்தியாவில் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான மைசூர் பாக் ஒரு சுவையான இனிப்பாகும். இதனை சாப்பிடும் போது மிகவும் தித்திப்பாக இருக்கும். இனி மைசூர்பாக் சாப்பிட வேண்டும் என்றால் கடைகளுக்கு செல்ல வேண்டாம். சுவையான மைசூர்பாகினை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

இந்தியாவில் இருக்கும் பல வகையான உணவுகள் உலக அளவில் மிகவும் பிரபலமான உணவுகளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இந்தியாவின் இனிப்பு உணவுகள் விசேஷ நிகழ்வுகளின் போதும் கொண்டாட்டங்களின் போதும் சிறப்பாக கருதப்படுகிறது. நமது வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றாலும் விசேஷ நிகழ்வுகள் என்றாலும் அதில் நிச்சயமாக ஒரு இனிப்பு உணவு இடம்பெறும். இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகள் மற்ற நாடுகளை விட தனித்துவமான செய்முறையில் தயாரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இந்தியாவில் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான மைசூர் பாக் ஒரு சுவையான இனிப்பாகும். இதனை சாப்பிடும் போது மிகவும் தித்திப்பாக இருக்கும். இனி மைசூர்பாக் சாப்பிட வேண்டும் என்றால் கடைகளுக்கு செல்ல வேண்டாம். சுவையான மைசூர்பாகினை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை மாவு
அரை கப் நெய்
ஒரு கப் சர்க்கரை
ஒரு கப் தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் வெறும் கடலை மாவை மட்டும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது உருக்கிய நெய்யில் பாதியை சலித்து வைத்துள்ள கடலை மாவில் ஊற்றி கட்டி வராதவாறு கலக்கவும். பின்னர் மைசூர் பாக் செய்யும் தட்டின் எல்லாப் பக்கங்களிலும் நெய் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். அடுத்து சர்க்கரை கரைந்தவுடன் அதனுடன் நாம் செய்து வைத்திருந்த கடலை மாவு மற்றும் நெய் கலவையை ஊற்றி கிளறவும். இதனை மிதமான தீயில் வைத்து கலக்க வேண்டும். சிறிது கெட்டியானதும் படிப்படியாக நெய்யை சேர்த்து, தொடர்ந்து கலந்து கொண்டே 10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின்பு மைசூர் பாக் திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும். மேலே நெய் தடவி 2 மணி நேரம் ஆற விடவும். ஆறியவுடன் டின்னில் இருந்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டி நெய் மைசூர் பாக்கை பரிமாறவும். இதனை வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு மென்மையாக இருக்கும். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

டாபிக்ஸ்