இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு வகைகளில் ஒன்றாக வத்தக்குழம்பு இருந்து வருகிறது. இதனை சூடான சாதத்தோடு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாம் வீட்டிலேயே வத்தக்குழம்பு செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் உணவு முறை மிகவும் சிறப்பான உணவு முறை ஆகும். இந்த உணவு முறையில் அனைத்து விதமான உணவுகளும் இடம்பெறும். சாதம், காய்கறி மற்றும் இனிப்பு என எல்லா விதமான உணவுகளும் இதில் அடங்கும். அதில் குறிப்பாக இங்கு செய்யப்படும் குழம்பு வகைகள் சிறப்பான ஒரு சுவையை நமக்கு வழங்குகின்றன. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு வகைகளில் ஒன்றாக வத்தக்குழம்பு இருந்து வருகிறது. இதனை சூடான சாதத்தோடு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாம் வீட்டிலேயே வத்தக்குழம்பு செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ஒரு நெல்லிக்காய் அளவுள்ள புளி
10 சின்ன வெங்காயம்
10 பல் பூண்டு
கால் கப் சுண்டைக்காய் வத்தல்
கால் கப் மணத்தக்காளி வத்தல்
தேவையான அளவு உப்பு
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
கால் டீஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
வறுத்து அரைக்க:
5 அல்லது 6 வற மிளகாய்
2 டேபிள்ஸ்பூன் மல்லி விதை
1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
1 கொத்து கறிவேப்பிலை
சிறிதளவு வெந்தயம்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடந்தும் அதில் மல்லி விதை, துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , வற மிளகாய் இவை அனைத்தையும் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இவ்வாறு வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு பொடியாக நறுக்கிய 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும். பின்னர் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும். கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். நன்கு வற்றிய பிறகு இறக்கவும். அவ்வளவு தான் ருசியான வத்தக் குழம்பு தயார். சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

டாபிக்ஸ்