கொஞ்சம் மீதமான சோறு! கொஞ்சம் கோதுமை மாவு! செய்யலாம் ருசியான சாஃப்ட் சப்பாத்தி! இதோ அசத்தலான செய்முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொஞ்சம் மீதமான சோறு! கொஞ்சம் கோதுமை மாவு! செய்யலாம் ருசியான சாஃப்ட் சப்பாத்தி! இதோ அசத்தலான செய்முறை!

கொஞ்சம் மீதமான சோறு! கொஞ்சம் கோதுமை மாவு! செய்யலாம் ருசியான சாஃப்ட் சப்பாத்தி! இதோ அசத்தலான செய்முறை!

Suguna Devi P HT Tamil
Published May 07, 2025 10:38 AM IST

இனி வீட்டில் மீதமான சாதத்தை தூக்கி எறிய வேண்டாம்?கோதுமை மாவுடன் சேர்த்து அருமையான முறையில் சப்பாத்தி செய்யலாம். இது மிகவும் மென்மையாகவும் வரும். இன்றே எப்படி செய்வது என தெரிந்துக் கொண்டு நீங்களும் செய்து அசத்துங்கள்.

கொஞ்சம் மீதமான சோறு! கொஞ்சம் கோதுமை மாவு! செய்யலாம் ருசியான சாஃப்ட் சப்பாத்தி! இதோ அசத்தலான செய்முறை!
கொஞ்சம் மீதமான சோறு! கொஞ்சம் கோதுமை மாவு! செய்யலாம் ருசியான சாஃப்ட் சப்பாத்தி! இதோ அசத்தலான செய்முறை!

தேவையான பொருட்கள்

1 கப் மீதமான சாதம்

1 கப்கோதுமை மாவு

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு ண்ணெய்

2 டேபிள்ஸ்பூன் நெய்

2 கப் சூடான தண்ணீர்

செய்முறை

சப்பாத்தி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமுள்ள சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அரைக்க வேண்டும். இதனை நன்றாக மாவு போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரைத்த மாவினை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட வேண்டும். இப்பொழுது இதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். மேலும் தேவையான அளவு சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். இந்த மாவினை எவ்வளவு நேரம் மெதுவாக பிசைகிறோமோ அவ்வளவு மென்மையாக வரும். இவ்வாறு பிசைந்த மாவை மீது எண்ணெய் தடவி இந்த பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். இதனை 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும் பின்னர் ஊறிய மாவினை எடுத்து சிறு சிறு உருண்டை உருண்டைகளாக பிடித்து உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து மிகவும் மெல்லியதாக இல்லாமல் சற்று தடிமனான அளவில் சப்பாத்தியினை தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசை சட்டி அல்லது பானை அடுப்பின் மீது வைத்து நன்கு சூடாக்கவும். இதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை வேக வைக்க வேண்டும். சப்பாத்தி மீதும் சிறிதளவு நெய் ஊற்றி வேக வைத்தால் சுவை மிகவும் அதிகமாக கூடும். இவ்வாறு உருட்டி வைத்த அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சப்பாத்தி போட்டு எடுக்க வேண்டும். சுவையான மற்றும் மென்மையான சப்பாத்தி தயார். நீங்களும் இதனை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.