கறிக்குழம்பு சுவையில் உருளைக் கிழங்கு குழம்பு செய்யலாமே! இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!
நமது வீடுகளில் இருக்கும் சிலருக்கு அசைவ உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அசைவ உணவுகளையே விரும்புவார்கள். இது போன்ற சமயத்தில் சைவ உணவிலேயே அசைவ உணவுகள் போல சுவை கொண்டு வர முடியும். இன்று கறிக்குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு குழம்பு எப்படி வைப்பது என பார்க்கலாம்.

அசைவ உணவு சாப்பிட முடியாத சமயங்களில் காளான், காலிபிளவர் போன்ற பல வகையான உணவுகளை நாம் மாற்று உணவாக சாப்பிடுவது வழக்கம். இனி அந்த வரிசையில் உருளைக் கிழங்கும் வரும். உருளைக் கிழங்கை வைத்து சமையல் செய்தாலும் கறி சமைப்பது போன்ற சுவை கிடைக்கும. நமது வீடுகளில் இருக்கும் சிலருக்கு அசைவ உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அசைவ உணவுகளையே விரும்புவார்கள். இது போன்ற சமயத்தில் சைவ உணவிலேயே அசைவ உணவுகள் போல சுவை கொண்டு வர முடியும். அந்த வரிசையில் இன்று நாம் உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
3 பெரிய உருளைக் கிழங்கு
அரை கப் சின்ன வெங்காயம்
1 பெரிய வெங்காயம்
1 துண்டு இஞ்சி
5 பல் பூண்டு
1 டேபிள்ஸ்பூன் மல்லி
1 டேபிள்ஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் கசகசா
கால் டீஸ்பூன் மிளகு
2 சிறிய துண்டு பட்டை
3 கிராம்பு
4 வற மிளகாய்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
கால் கப் துருவிய தேங்காய்
நெல்லிக்காய் அளவு புளி
ஒரு கொத்து கறிவேப்பிலை
தாளிக்க:
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
ஒரு கொத்து கறிவேப்பிலை
2 வற மிளகாய்
செய்முறை
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வறுக்க தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கசகசா, கிராம்பு, வற்றல், நறுக்கிய சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
பின்னர் அதே கடாயில் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும். வறுத்த மசாலா சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு,தேங்காய் துண்டுகள் சேர்த்துவிட்டு அரைக்கவும். பின்னர் இதில் கொஞ்சமாக புளி, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தயாராக வைக்கவும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வற்றல், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் உருளைக் கிழங்கு அசைவக்குழம்பு தயார்.

டாபிக்ஸ்