காய்கறிகள் சேர்த்து சுவையான அவல் உப்புமா செய்யலாமா? காலை இரவு என இரு வேளைக்கும் சூப்பர் சாய்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காய்கறிகள் சேர்த்து சுவையான அவல் உப்புமா செய்யலாமா? காலை இரவு என இரு வேளைக்கும் சூப்பர் சாய்ஸ்!

காய்கறிகள் சேர்த்து சுவையான அவல் உப்புமா செய்யலாமா? காலை இரவு என இரு வேளைக்கும் சூப்பர் சாய்ஸ்!

Suguna Devi P HT Tamil
Published May 08, 2025 12:33 PM IST

நமது வீடுகளில் அவல் வைத்து சுவையான சிற்றுண்டி உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் வட இந்தியாவில் போகா எனும் உணவினை அவல் கொண்டே செய்கின்றனர். இது சாப்பிடுவதற்கு உப்புமா போலவே இருக்கும் . இன்று நாம் செய்யும் உப்புமா ரெசிபியை அவல் வைத்து செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

காய்கறிகள் சேர்த்து சுவையான அவல் உப்புமா செய்யலாமா? காலை இரவு என இரு வேளைக்கும் சூப்பர் சாய்ஸ்!
காய்கறிகள் சேர்த்து சுவையான அவல் உப்புமா செய்யலாமா? காலை இரவு என இரு வேளைக்கும் சூப்பர் சாய்ஸ்!

தேவையான பொருட்கள்

2 கப் அவல்

அரை கப் பச்சை பட்டாணி

2 கேரட்

7 பீன்ஸ்

தேவையான அளவு எண்ணெய்

1 டீஸ்பூன் சீரகம்

4 பற்கள் இடித்த பூண்டு

2 பச்சை மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை

1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

1 டீஸ்பூன் சர்க்கரை

1 டீஸ்பூன் மல்லித் தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

ஒரு கப் தண்ணீர்

ஒரு கைப்பிடி கொத்தமல்லி

எலுமிச்சை பழச்சாறு

செய்முறை

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவும். பின் அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து சூடாக்க வேண்டும். பின்னர் இந்த நெய் உருகியவுடன் அதில் சீரகம் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் இடித்த பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கி விட வேண்டும். இப்போது இதில் பச்சை பட்டாணி, நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த கலவையில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், சர்க்கரை, மல்லித் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

சில நிமிடங்கள் கழித்து இதில் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்பொழுது வைத்துள்ள அவலை 3 முறை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து ஒரு தட்டில் பரப்பி உலர விட வேண்டும். இப்போது கழுவிய அவலை பட்டாணி கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதில் வேர்கடலை சேர்க்க வேண்டும். கடைசியாக, ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும். இப்பொழுது இதில் 2 சொட்டு எலுமிச்சைபழச்சாறு சேர்த்தால், சுவை இன்னும் அதிகரிக்கும். சூடாக இருக்கும்போதே இதை சாப்பிடவும். காலை மற்றும் இரவு என இரு வேளைகளுக்கும் இது ஒரு சுப்பரான உணவாக இருக்கும்.