மாம்பழ சீசன் வந்தாச்சு! அப்போ உடனே தித்திக்கும் மாம்பழ ஜாம் செய்யலாமே! இதோ மாஸ் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாம்பழ சீசன் வந்தாச்சு! அப்போ உடனே தித்திக்கும் மாம்பழ ஜாம் செய்யலாமே! இதோ மாஸ் ரெசிபி!

மாம்பழ சீசன் வந்தாச்சு! அப்போ உடனே தித்திக்கும் மாம்பழ ஜாம் செய்யலாமே! இதோ மாஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Mar 16, 2025 03:01 PM IST

மார்ச் மாதம் ஆரம்பித்து விட்டது. இந்த காலத்தில் தான் மாம்பழ சீசன் இருக்கும். அதிகமான மாம்பழம் இந்த காலக்கட்டத்தில் கிடைக்கும். வெறுமேனே மாம்பழங்களை சாப்பிடாமல் வித்தியாசமாக புது வித உணவுகளை செய்து சாப்பிடலாம். எளிமையான முறையில் வீட்டிலேயே மாம்பழ ஜாம் செய்யலாம். எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மாம்பழ சீசன் வந்தாச்சு! அப்போ உடனே தித்திக்கும் மாம்பழ ஜாம் செய்யலாமே! இதோ மாஸ் ரெசிபி!
மாம்பழ சீசன் வந்தாச்சு! அப்போ உடனே தித்திக்கும் மாம்பழ ஜாம் செய்யலாமே! இதோ மாஸ் ரெசிபி! (Pixabay)

தேவையான பொருள்கள்

2 பெரிய சைஸ் மாம்பழம் 

2 கப் சர்க்கரை 

அரை டீஸ்பூன் நெய் 

2 ஏலக்காய்

1  பட்டை

கால் டீஸ்பூன் லவங்கம் கலவை தூள்

ஒரு சிட்டிகை உப்பு

பொடி வகை 2

2 சிட்டிகை கரம் மசாலா தூள்

ஒரு சிட்டிகை உப்பு 

பொடி வகை 3:

கால் டீஸ்பூன் மிளகாய் தூள் 

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 

கால் டீஸ்பூன் வறுத்து அரைத்த சீரக தூள்

தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் முழுவதும் பழுக்காத ஒரு பச்சை மாங்காயை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று மாம்பழம் பழுத்து இருந்தாலும் சுவை நன்றாக இருக்கு. பின்னர் இந்த துருவிய மாங்காய் உடன்  சர்க்கரை சேர்த்து கலக்கி அதனை அப்படியே 30 நிமிடம் வைக்கவும். நீங்கள் சேர்க்க கூடிய சர்க்கரையின் அளவு மாங்காயின் புளிப்புக்கு ஏற்றபடி சேர்க்கவும். இப்போது நீர்த்து இருக்கும் மாங்காய் சர்க்கரை கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். பின்னர் சர்க்கரை சற்று கெட்டியாகும் போது மேலே கூறிய தூள்களில் ஏதேனும் ஒரு தூள் வகையை சேர்க்கவும்

மேலே சொல்லி இருக்கும் பொடி வகை காம்பினேஷனில் எந்த வகை காம்பினேஷன் விரும்பினாலும் சேர்க்கலாம். இந்த பொடியினை கலக்கும் போது இனிப்பு, புளிப்பு, காரம் ஆகியவை  கலந்து சுவையான ஜாம் கிடைக்கும்.  கலந்து விட்டு ஒரு கம்பி பதம் வரும் வேளையில்  சிறிதளவு நெய் விட்டு கலந்து விட வேண்டும். இப்போது சுவையான மாங்காய் ஜாம் தயார். இதனை ரொட்டி வகை, பிர ட் போன்றவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதனை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து சாப்பிடுங்கள்.