கேரள ஸ்டைலில் க்ரிஸ்பியான பலாக்காய் சிப்ஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரள ஸ்டைலில் க்ரிஸ்பியான பலாக்காய் சிப்ஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

கேரள ஸ்டைலில் க்ரிஸ்பியான பலாக்காய் சிப்ஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 06:40 AM IST

கேரள மாநிலம் சென்று திரும்புவார்கள் நிச்சயமாக நேந்திரம் பழ சிப்ஸ் மற்றும் பலாப்பழ சிப்ஸ் வாங்கி வருவார்கள். அங்கு செய்யப்படும் சிப்ஸ் மிகவும் சுவையானதாக இருக்கும். இன்று இதில் ஒன்றான பலாப்பழ சிப்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி என இங்கு பார்க்கப் போகிறோம்.

கேரள ஸ்டைலில் க்ரிஸ்பியான பலாக்காய் சிப்ஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
கேரள ஸ்டைலில் க்ரிஸ்பியான பலாக்காய் சிப்ஸ் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

நாம் எப்போதும் பலாப்பழம் பழுத்த பின்னரே அதன் சுலைகளை சாப்பிடுவோம். அதுவும் தமிழில் கூறப்படும் முக்கனிகளில் ஒன்றாகவும் பலா இருந்து வருகிறது. இதன் தித்திக்கும் சுவையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பும் உணவாக இருந்து வருகிறது. பலா காயாக இருக்கும் போதும் கறி சமைக்க பயன்படுகிறது. கேரளாவில் இது மிகவும் பிரபலமானதாகும். அதே போல கேரளாவில் பலா காய்களை வைத்து சுவையான மொறுமொறுப்பான சிப்ஸ் செய்யப்படுகிறது. இந்த சிப்ஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாகவும் இதில் பல சத்துக்கள் இருப்பதாகவும் இருக்கிறது. இன்று பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

அரை கப் பழுக்காத பலா சுளைகள்

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

2 டீஸ்பூன் கல் உப்பு

சிப்ஸ் பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் பலாக்காயை தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்து பலா காய்களையும் ஒரே அளவில் நீளவாக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கிண்ணத்தில் தண்ணீர், உப்பு, மஞ்சள் ஆகியவைகளை கலந்து தனியாக வைக்க வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிப்ஸ் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்கு கொதித்த பின்னர் இதில் நாம் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள பலா காயத்தை ஒவ்வொன்றாக போட வேண்டும். நன்றாக பொரிந்து வரும் வேளையில் அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

இந்த சமயத்தில் நாம் கலந்து வைத்துள்ள உப்பு மஞ்சள் தண்ணீரை எண்ணெயில் ஊற்ற வேண்டும். இது நன்றாக பொரிந்து அடங்கிய பின்னர் பலா சிப்ஸ்களை எண்ணெயில் இருந்து எடுத்து வைக்க வேண்டும். எண்ணெய் வடிந்த பின்னர் இதில் உப்பு மிளகாய் பொடி தூவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இது கேரளாவில் செய்யப்படும் பிரபல சிற்றுண்டி உணவாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை தாராளமாக சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெய் அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம். நீங்களும் இதனை வீட்டிலேயே முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.