கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் காரா பாத் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் காரா பாத் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் காரா பாத் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

Suguna Devi P HT Tamil
Published Mar 28, 2025 05:30 PM IST

தினமும் வழக்கமான காலை உணவுகளால் சலித்து போகி இருந்தால் புது விதமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். அதற்காக தான் கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் ரெசிபி ஒன்று தான் கார பாத், இதனை எப்படி செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் காரா பாத் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!
கர்நாடகா ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட் காரா பாத் சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

தேவையான பொருட்கள்

1 கப் ரவை 

1 கப் பீன்ஸ்

1 கப் கேரட்

கால் கப் பச்சை பட்டாணி 

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 

1 டேபிள்ஸ்பூன் நெய்

1 டீஸ்பூன் கடலை பருப்பு 

10 முந்திரி பருப்பு

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன் சீரகம்

ஒரு பெரிய வெங்காயம் 

3 பச்சை மிளகாய் 

சிறிய துண்டு இஞ்சி

கால் கப் வெஜிடபிள் ஸ்டாக்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு பெரிய தக்காளி

அரை கப் துருவிய தேங்காய்

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கப் நறுக்கிய பீன்ஸ் சேர்க்கவும். ஒரு கப் நறுக்கிய கேரட் மற்றும் பட்டாணி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு கலந்து மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து காய்கறிகளை வடிகட்டி தனியாக வைக்கவும். பின்னர் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து அதில்  எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் இதில்  கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு கடுகு, சீரகம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அவற்றை நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் ரவையை  சேர்த்து நன்றாக வறுக்கவும். தண்ணீர் சேர்த்து, வெஜிடபிள் ஸ்டாக் தண்ணீர் சேர்த்து கலக்கவும். உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் வேகவைத்த காய்கறிகள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இப்பொழுது கடாயை மூடி, மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கடாயை திறந்து சிறிது நெய் ஊற்றவும். புதிதாக துருவிய தேங்காய், சில கறிவேப்பிலை மற்றும் சில நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். சுவையான காரா பாத் உங்கள் விருப்பப்படி சாம்பார் மற்றும் சட்னியுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.