இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!

இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Published Apr 07, 2025 12:05 PM IST

வழக்கமான சட்னி வகைகள் உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்துகிறதா? அப்படியென்றால் வித்தியாசமான சட்னி செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை மட்டும் இல்லாமல் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடும் ஒரு சட்னி தான் குடைமிளகாய் சட்னி. இதனை எளிமையாக வீட்டிலயே செய்யலாம். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!
இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

2 குடைமிளகாய்

5 வற மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

1 டீஸ்பூன் சீரகம்

1 பெரிய வெங்காயம்

சிறிய நெல்லிக்காய் அளவு புளி

2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்

2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

தேவையான அளவு உப்பு

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

ஒரு கொத்து கறிவேப்பிலை

ஒரு கொத்து கொத்தமல்லி தழை

செய்முறை

முதலில் குடைமிளகாயை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல வெங்காயத்தையும் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதன் பிறகு கடலை பருப்பு, வறமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு குடைமிளகாயும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி பிறகு தேங்காய் துருவல் கொச்சமல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். கடாய் சூட்டிலேயே துருவிய தேங்காய் கொத்தமல்லி, கறிவேப்பிலை அனைத்தும் வதங்கி விடும். இவையெல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பையும் சேர்த்த பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னியை மைய அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.