இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷ் இது தான்! குடைமிளகாய் சட்னி ரெசிபி இதோ!
வழக்கமான சட்னி வகைகள் உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்துகிறதா? அப்படியென்றால் வித்தியாசமான சட்னி செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை மட்டும் இல்லாமல் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடும் ஒரு சட்னி தான் குடைமிளகாய் சட்னி. இதனை எளிமையாக வீட்டிலயே செய்யலாம். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

காலை நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளான இட்லி மற்றும் தோசைக்கு இணையாக வைத்து சாப்பிடும் உணவு தான் சட்னி, நமது வீடுகளில் பல விதமான சட்னி வைத்து சாப்பிட்டு இருப்போம். தக்காளி, தேங்காய் என்ற இரு வகையான சட்னி மட்டுமே பிரதான உணவாக இருந்து வருகிறது. இந்த சட்னி வகைகள் உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்துகிறதா? அப்படியென்றால் வித்தியாசமான சட்னி செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை மட்டும் இல்லாமல் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடும் ஒரு சட்னி தான் குடைமிளகாய் சட்னி. இதனை எளிமையாக வீட்டிலயே செய்யலாம். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 குடைமிளகாய்
5 வற மிளகாய்
2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
1 டீஸ்பூன் சீரகம்
1 பெரிய வெங்காயம்
சிறிய நெல்லிக்காய் அளவு புளி
2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஒரு கொத்து கறிவேப்பிலை
ஒரு கொத்து கொத்தமல்லி தழை
செய்முறை
முதலில் குடைமிளகாயை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல வெங்காயத்தையும் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதன் பிறகு கடலை பருப்பு, வறமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு குடைமிளகாயும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி பிறகு தேங்காய் துருவல் கொச்சமல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். கடாய் சூட்டிலேயே துருவிய தேங்காய் கொத்தமல்லி, கறிவேப்பிலை அனைத்தும் வதங்கி விடும். இவையெல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பையும் சேர்த்த பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னியை மைய அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

டாபிக்ஸ்