உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி!
வீட்டில் எளிமையான முறையில் அல்வா செய்ய முடியும். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் போதும் இந்த அல்வா செய்வதற்கு, அல்வா செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
இந்தியாவின் இனிப்பு உணவுகளுக்கு என்றென்றும் உலக அளவில் புகழ் உள்ளது. அந்த அளவிற்கு இந்திய இனிப்பு உணவுகள் தனித்துவமான சுவையுடனும் இருக்கும். இந்தியாவில் கொண்டாட்டம் என்றாலும் விழாக்கள் என்றாலும் இனிப்பே இனிப்பு உணவே பிரதானமாக கொண்டாட்டமாக இருந்து வருகிறது இந்த நிலையில் இந்தியாவில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள் நாட்டில் பல மூலைகளிலும் விற்கப்படுகின்றன வகைகளில் முதன்மையான இடத்தை கொடுப்பது என்றால் அது அல்வாவிற்கு கொடுக்கலாம் அந்த அளவிற்கு அல்வாவிற்கு பல தனி ரசிகர் பட்டாளமே உண்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அல்வா பொதுவான இனிப்பு உணவாக இருக்கிறது குறிப்பாக விழா காலங்களில் அல்வா இல்லாத வீடுகளில் இல்லாத அளவிற்கு இருந்து வருகிறது ஆனால் இந்த அல்வாவை சரியான பதத்தில் செய்வது சற்று சிரமமான காரியம் ஆகும்
இதனால் நம் மக்கள் பேக்கரிகளில் சென்று அல்வாவை வாங்கி வருகின்றனர். ஒரு சில பேக்கரிகளை தவிர பல பேக்கரிகளில் இனிப்பு உணவுகளை சரியான அளவில் யாரும் தயார் செய்வதில்லை. வீட்டில் எளிமையான முறையில் அல்வா செய்ய முடியும். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் போதும் இந்த அல்வா செய்வதற்கு, அல்வா செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
7 முதல் 8 பிரட் துண்டுகள்
400 கிராம் அளவுள்ள சர்க்கரை
500 கிராம் நெய்
சிறிதளவு முந்திரி பருப்பு
சிறிதளவு பாதாம் பருப்பு
அரை லிட்டர் பால்
சிறிதளவு ஏலக்காய் தூள்
செய்முறை
பிரட் அல்வா செய்வதற்கு முதலில் பிரட் பிரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் நெய்யை ஊற்றி சூடானதும் பிரட்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே நெய்யில் மீண்டும் சிறிதளவு நெய்யை சேர்த்து முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி மேலும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சர்க்கரை பாகை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை பாகை நாம் வறுத்து வைத்திருந்த பிரட் துண்டுகளோடு கலந்து நன்றாக கலக்கவும். பின்னர் காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து இந்த பிரட் தூண்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் மிதமான சூட்டில் வைத்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டு இருக்க வேண்டும். நடுவே நெய் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஏலக்காயை பொடி செய்து இதில் சேர்க்க வேண்டும். மேலும் நாம் நெய்யில் வறுத்து வைத்திருந்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை இதில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நெய் தனியாக பிரிந்து வரும் தருவாயில் அடுப்பை அணைத்து வைத்துவிட்டு அதனை அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் மிருதுவான பிரட் அல்வா தயார். உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு இந்த பிரெட் அல்வாவை செய்து கொடுத்த மகிழுங்கள். பண்டிகை காலங்களிலும் இந்த பிரட் அல்வாவை முயற்சி செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்