Millet Vadai: சத்தான சுவையான மில்லட் வடை செய்யலாமா? அருமையான செயமுறை இதோ!
Millet Vadai: மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான உணவுகளிலும் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடலுக்கு தேவாயான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

தமிழ் உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் தானியங்கள் அதிகமான ஊட்டச்சத்துகளை கொண்டு உள்ளன. ஆதி கால தமிழன் அவனது உணவில் இன்றியமையா பொருளாக இந்த தானியங்களை பயன்படுத்தி வந்தான். காலநிலை மாறும் போது இந்த தானியங்களின் பயன்பாடு குறைந்து வந்தது. தற்போது பல இயற்கை உணவுகளில் இந்த தானியங்களின் பங்கு முக்கியமான ஒன்றாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான உணவுகளிலும் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடலுக்கு தேவாயான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
தானியங்களை வைத்து சமைக்கப்படும் உணவுகள் பல வகைகளில் உள்ளன. தானியங்களால் செய்யப்படும் வடை மிகவும் ருசியான உணவு ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவுப் பொருளாக இந்த மில்லட் வடை உள்ளது. இதனை செய்யும் எளிமையான முறை குறித்து நாம் அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கால் கப் தினை, கால் கப் வரகு, கால் கப் கடலைபருப்பு, கால் கப் துவரம்பருப்பு, கால் கப் உளுந்தம்பருப்பு, கால் கப்பாசி பருப்பு, கால் கப் பச்சரிசி, கால் கப் புழுங்கல்அரிசி, ஒரு டீஸ்பூன் பெருங்காயம், நான்கு வரமிளகாய், இரண்டு பச்சை மிளகாய், 4 முதல் 5 சிறிய வெங்காயம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கருவேப்பிலை, பொரிக்க தேவையான அளவு எண்ணெய், தேவையா அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.