'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!

'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!

Marimuthu M HT Tamil Published May 01, 2025 05:47 PM IST
Marimuthu M HT Tamil
Published May 01, 2025 05:47 PM IST

கோதுமை மாவு, ரவை, மைதா மாவு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டிகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தயாரிக்க குறைந்த நேரம், குறைவான பொருட்கள் தேவை. சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!
'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!

இது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப், தமிழ்நாட்டிலும் தயாரிக்கப்படுகிறது. இதனை தமிழ்நாட்டில் தட்டை என்கின்றனர்.

கோதுமை மாவு, ரவை, மைதா மாவு ஆகிய மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டிகள் சாப்பிட மிகவும் நொறுக்குத் தன்மையானவை. அலாதி சுவையாக இருக்கும். தயாரிக்க குறைந்த நேரம், குறைவான பொருட்கள் இருந்தாலே போதும் என்ற நிலையில் தான், இந்த தட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தட்டைகள் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த தட்டையை எப்படி செய்யலாம் என்பதை இதுவரை முயற்சிக்காதவர்கள் கூட, எளிமையாக நாங்கள் தரும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, இந்த தட்டையினை முயற்சி செய்து பார்க்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தட்டை செய்யத்தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்,

மைதா மாவு - 1/2 கப்,

ரவை - 1/2 கப்,

உளுத்தம் பருப்பு - சிறிதளவு,

ஓட்ஸ் - 1/2 தேக்கரண்டி,

வெண்ணெய் - 1/4 கப்,

எண்ணெய் - பொரிப்பதற்கு,

உப்பு - சுவைக்க

தட்டை செய்யும் எளிய படிப்படியான வழிமுறைகள்:

  • ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, உளுத்தம் பருப்பு சேர்த்து கலக்கவும்.
  • இதனுடன் வெண்ணெய் சேர்த்து மெதுவாக கலந்து அதனை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவோ இல்லாதவாறு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • அப்படி ஒரு மாவை, ஒரு பருத்தி துணியால் மூடி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பின், சப்பாத்தி போல அழுத்தி, கேன் மூடியை பயன்படுத்தி சிறியவட்ட வடிவிலான துண்டுகளாக வெட்டவும்.
  • அடுத்து, ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி, அந்த உருண்டையில் மெதுவாக துளைகளை இடுங்கள். அப்படி இல்லையென்றாலும், அதை அப்படியே எடுத்து சூடான எண்ணெயில் போடுங்கள்.
  • இப்போது, இருபுறமும் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் சுவையான தட்டை சாப்பிடத் தயாராக இருக்கும்.

மேலும் படிக்க: 'நம் ஊர் சாம்பார் மாதிரி.. கேரளாவில் புளிசேரி’: பாரம்பரிய கேரள புளிசேரி செய்வது எப்படி?: படிப்படியான வழிகள்!

அதிகப்படியான எண்ணெயை நீக்க டிஷ்யூ பேப்பரில் தட்டையை எண்ணெயில் இருந்து எடுத்து பரப்பிவைக்கவும். சூடு ஆறியதும், தேநீர் அல்லது காபியுடன் இந்த புதிய சிற்றுண்டிகளை உண்ணலாம்.