‘மல்லுங்கு சாப்பிட்டிருக்கீங்களா?’: இலங்கைத் தமிழர்கள் அதிகம் சாப்பிடும் மல்லுங்கு உணவினை செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘மல்லுங்கு சாப்பிட்டிருக்கீங்களா?’: இலங்கைத் தமிழர்கள் அதிகம் சாப்பிடும் மல்லுங்கு உணவினை செய்வது எப்படி?

‘மல்லுங்கு சாப்பிட்டிருக்கீங்களா?’: இலங்கைத் தமிழர்கள் அதிகம் சாப்பிடும் மல்லுங்கு உணவினை செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil Published May 10, 2025 03:34 PM IST
Marimuthu M HT Tamil
Published May 10, 2025 03:34 PM IST

மல்லுங்கு ("Mallung") என்ற சொல் இலங்கைத் தமிழிலும், சிங்கள மொழியிலும் “கலந்தது”. இதன் பொருள் என்னவென்றால், சிறிது மசாலா சேர்த்த காய்கறி கலவை என்பதாகும்.

‘மல்லுங்கு சாப்பிட்டிருக்கீங்களா?’: இலங்கைத் தமிழர்கள் அதிகம் சாப்பிடும் மல்லுங்கு உணவினை செய்வது எப்படி?
‘மல்லுங்கு சாப்பிட்டிருக்கீங்களா?’: இலங்கைத் தமிழர்கள் அதிகம் சாப்பிடும் மல்லுங்கு உணவினை செய்வது எப்படி?

மல்லுங்கு என்பது இலங்கையில் பரவலாக தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரியமான மற்றும் சத்தான உணவாகும். இது முதன்மையாக கீரை, தேங்காய், மற்றும் சில எளிய குழையும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

மிகக் குறைந்த எண்ணெய், குறைந்த காரத்துடன் சமைக்கப்படுவதால், இது உடலின் ஆரோக்கியத்திற்கு மற்றும் ஜீரணத்திற்கு எளிதான உணவாகும். மல்லுங்கு ("Mallung") என்ற சொல் இலங்கைத் தமிழிலும், சிங்கள மொழியிலும் “கலந்தது”. இதன் பொருள் என்னவென்றால், சிறிது மசாலா சேர்த்த காய்கறி கலவை என்பதாகும். நான்கு பேர் உண்ணும் வகையில் மல்லுங்கு செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

மல்லுங்கு செய்யத்தேவையான பொருட்கள்:

நன்றாக சுத்தம் செய்த முருங்கை இலைக் கீரை – 2 கப் ( இந்தக் கீரை கிடைக்காதவர்கள், பசலைக் கீரை மற்றும் அகத்தி கீரையினை எடுத்துக்கொள்ளலாம்),

தேங்காய்த் துருவல் – அரை கப்;

பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது;

பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (இரண்டு துண்டுகளாக வெட்டியது),

உப்பு – தேவையான அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

இஞ்சி – சிறிய துண்டுகளாக விருப்பத்திற்கேற்ப நறுக்கியது,

மிளகு தூள் – கால் டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

மல்லுங்கு செய்முறை:

முதலில், கீரையை நன்கு சுத்தம் செய்து, தேவையான அளவு நீர் விட்டு நன்கு கழுவி வைக்கவும்.

ஒரு பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு, நன்கு வதக்கவும். வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.

பிறகு கழுவிய கீரையை அதில் சேர்க்கவும். குறிப்பாக, கீரையை நீரே இல்லாமல் சாறு இல்லாத வகையில் சேர்த்தால், மிகச் சுவையான மென்மையான பதத்தில் இருக்கும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

கீரை சற்றும் வாடாமல், அதே நேரத்தில் வேகவும் செய்ய வேண்டும். ஆகவே, அதனை மூடி வைக்கவும். பின் அப்படியே ஒரு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

கீரை நன்றாக வெந்து மென்மையடைந்ததும், அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறவும். மேலும், மல்லுங்கில் சிறிது வெந்தயம் சேர்த்து வதக்கினால், சுவை கூடும்.

தேங்காய் நன்றாக கலந்து, சுவை உடனே வெளிப்படும். இப்போது சுடச்சுடச் சாப்பிடத் தயார்.

இப்போது மல்லுங்கினை சாதம், பிட்டு, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.