சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு வேண்டுமா? அதான் பச்சைப்பயறு பாயாசம் இருக்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு வேண்டுமா? அதான் பச்சைப்பயறு பாயாசம் இருக்கே!

சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு வேண்டுமா? அதான் பச்சைப்பயறு பாயாசம் இருக்கே!

Suguna Devi P HT Tamil
Published May 08, 2025 02:55 PM IST

நாம் அடிக்கடி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக பாசிப்பயறு இருந்து வருகிறது. இது நமது உடலுக்கு பல விதமான சத்துக்களை வழங்குகிறது. இந்த பச்சைப்பயறு வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். பச்சைப்பயறு பாயாசம் செய்வது எப்படி என தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு வேண்டுமா? அதான் பச்சைப்பயறு பாயாசம் இருக்கே!
சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு வேண்டுமா? அதான் பச்சைப்பயறு பாயாசம் இருக்கே!

தேவையான பொருட்கள்

1 கப் பச்சைப்பயறு

2 கப் தண்ணீர்

3 டேபிள்ஸ்பூன் நெய்

10 முதல் 15 உலர் திராட்சை

10 முதல் 15 முந்திரி பருப்பு

சிறிதளவு தேங்காய்

ஒரு கப் பொடியாக்கிய வெல்லம்

1 கப் காய்ச்சி ஆறவைத்த பால்

ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள்

அரை கப் தேங்காய்ப்பால்

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பச்சைப்பயறு மட்டும் சேர்த்து அதில் இருந்து வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் வறுத்த பச்சைப்பயறை ஆற வைத்து அதனை குக்கரில் சேர்த்து, மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடாக்கி உருக்கியதும் அதில் உலர் திராட்சை, முந்திரி, தேங்காய் துண்டுகளை தனி தனியே சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில், வேகவைத்த பச்சைப்பயறு, கரைத்த வெல்லம், சேர்த்து கொதிக்க வைக்கவும். மூன்று நிமிடங்களுக்கு பிறகு கொதிக்க வைத்து ஆறிய பாலை சேர்த்து கலந்து 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை, வறுத்த தேங்காய், சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும். இறுதியாக கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும். பச்சைப்பயறு பாயாசத்தை சூடாக அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம். இதனை ஏதேனும் விஷேச சமயத்திலும், யாருக்காவது பிறந்தநாள் சமயத்திலும் செய்து சாப்பிடலாம். விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். நீங்களும் இதனை உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்து பாருங்கள். மேலும் பச்சைப்பயறை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கும் இதனை செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.