'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!
கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி என்பது குறித்த படிப்படியான வீட்டு சமையல் முறையைப் பார்ப்போம்.

அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வரும் இளைஞர்கள் எளிதில் செய்து சாப்பிடும் வகையிலான ஒரு உணவு தான், வெந்தய பன்னீர் புலாவ். இரண்டு பேரில் இருந்து மூன்று பேர் வரை, சாப்பிடும் வகையிலான இந்த வெந்தய பன்னீர் புலாவ்வை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.
வெந்தய பன்னீர் புலாவ் செய்யத்தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்;
எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்,
நெய் - அரை டீஸ்பூன்,
ஒரு பெரிய வெங்காயம் (அரை கப் அளவு) - நறுக்கியது;
பச்சை மிளகாய் - 4;
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
உறைந்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்,
கேரட் - 1/4 கப்,
உப்பு - 1 டீஸ்பூன்,
நீர் - ஒன்றரை கப் நீர்,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
இலவங்கப்பட்டை - 1,
கிராம்புகள் - 3,
சீரகம் - 1/4 சீரகம்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா பொடி - அரை டீஸ்பூன்,
பன்னீர் துண்டுகள் - 10
மேலும் படிக்க: ‘நாவில் எச்சிலை ஊறவைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா இப்படி செய்து பாருங்க?’: எளிய செய்முறை குறிப்பு
வெந்தய பன்னீர் புலாவ் செய்முறை:
பன்னீர் புலாவ் செய்வதற்கு முன்பு, வாணலியை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
அதில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா பொடியைப் போட்டுக்கொள்ள வேண்டும். வெட்டிவைத்த பன்னீர் துண்டுகளை அந்த வாணலியில் ஒரு நிமிடத்திற்கு மட்டும் போட்டு, வதக்கவும். இப்போது அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரில் அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிவிட்டு, கூடவே அரை டீஸ்பூன் நெய்யும் போட்டுவிட்டு அடுப்பில் தீயை பெரியளவில் தூண்டவும். மூன்று எண்ணிக்கையில் கிராம்பு, பட்டை ஒரு மிதமான அளவிலும் அடுப்பில் போட வேண்டும். அடுத்து கால் டீஸ்பூன் அளவு சீரகம் போட்டு நன்கு பொரியவிட்டுவிட வேண்டும்.
அதனைத்தொடர்ந்து அடுப்பில் தீயின் அளவை சற்று குறைத்துக் கொண்டு, குக்கரில் ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நீளவாக்கில் நறுக்கி, போட்டுவிட வேண்டும். இப்போது எண்ணெய்யில் வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அதன்பின், நான்கு நறுக்கிய பச்சை மிளகாய்களைப் போட்டு வதக்கிக்கொள்ளவும். பின், அதனுள் கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளலாம்.
அடுத்து கால் கப் அளவுக்கு நறுக்கிய வெந்தயக் கீரைகளை அதில் போடவும். வெந்தயக் கீரைகளை அதிகமாகப் போட்டால் கசப்புத்தன்மை வந்துவிடும். எனவே, கால் கப் தாண்டி போடக் கூடாது. மேலும், அந்த கலவையில் கால் கப் அளவுக்கு பச்சைப்பட்டாணி, கால் கப் அளவுக்கு கேரட் ஆகியவற்றை அதில் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து கால் டீஸ்பூன் அளவு கரம் மசாலா போட்டு அந்தக் கலவையை நன்கு வதக்கிக்கொள்ளவும். பின்னர், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு கப் அளவு அரிசி எடுத்து வைத்திருப்பதால், ஒன்றரை கப் அளவுக்கு அதில் நீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 20ல் இருந்து 25 நிமிஷம் நன்கு ஊறிய பாசுமதி அரிசியை எடுத்து நீர் கொதித்தபின், குக்கரில் சேர்த்துக்கொள்ளலாம். பின் குக்கரில் அரிசியை, அந்தக் கலவையில் நன்கு கலந்துவிடலாம்.
இப்போது வறுத்து வைத்திருந்த பன்னீரை அதில் சேர்த்துக்கொள்ளலாம். அது மேலாகவே இருக்கட்டும். இப்போது குக்கரின் மூடியை மூடி, ஒரு விசில் வரும் வரை வைக்கவும். விசில் வரவில்லை என்றாலும், ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து குக்கரை அடுப்பில் இருந்து இறக்கவும். அதிக நேரம் வைத்தால் அடிபிடித்துவைத்துவிடும். தற்போது ருசியான வெந்தய பன்னீர் புலாவ் தயார்!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்