குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!
குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் வந்து விடும் ஆபத்து உள்ளது. ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும்.

குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் வந்து விடும் ஆபத்து உள்ளது. ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும். மேலும் தற்போது உள்ள மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கால நிலை மாற்றங்களும் குழந்தைகளின் உடலில் நோய்தாக்கத்தை அதிகரிக்கின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையானதாக இருத்தல் அவசியமாகும். குழந்தைகளின் உடலில் சிறு மாற்றங்களை வைத்தே அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையை கணக்கிடலாம்.
குறிப்பாக பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் அவர்களது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது போது மிகவும் கவலைப்படுவார்கள். குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படவோ அல்லது தொற்றுநோய்க்கு ஆளாகவோ வாய்ப்புள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கான 5 அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அடிக்கடி ஏற்படும் தொற்றுகள்
மீண்டும் மீண்டும் தொற்றுநோய்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். குறிப்பாக காது தொற்று, சைனஸ் தொற்று மற்றும் நிமோனியா போன்ற தொற்றுக்கள் அடிக்கடி ஏற்படலாம் . அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள், மீண்டும் வரும். சிகிச்சை அளித்தால் மட்டுமே சரியாகும்.