தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ!
தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ, இதைச் செய்தால் கொண்டாட்டங்கள் கூடுதல் குதூகலமாகும்.

தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா? புத்தாடை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சா? இனி என்ன பலகாரம் செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? புதிதாக என்ன செய்யலாம்? வித்யாசமாக என்ன செய்யலாம்? ஆரோக்கியமாக என்ன செய்யலாம்? அத்தனை யூடியூப் சானல்கள், ரீல்ஸ்களிலும், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று எண்ணற்ற ரெசிபிக்கள் கொட்டிக்கிடக்கிறது. இத்தனைக்கும் மத்தியில்தான் என்ன செய்யலாம் என்று குழம்பியிருக்கிறீர்களா? அதற்கும் ரெசிபிக்களை கொடுத்துக்கொண்டேயிருக்கும் அதேவேளையில் தீபாவளி நாளன்று காலையில் இட்லியுடன் சேர்த்து சாப்பிட ஒரு மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபியையும் தருகிறோம். செய்து, சாப்பிட்டு, தீபாவளியைன் கொண்டாடி மகிழங்கள்.
மட்டன் கெட்டிக் குழம்பு செய்வது எப்படி?
மீடியம் அளவு துண்டுகளாக்கிய முக்கால் கிலோ மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். 20 சின்ன வெங்காயத்தை முழுதாக உரித்து வைத்துக்கொள்ளவேண்டும். 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது ஒரு ஸ்பூன் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேரத்து சூடாக்கி, அதில் வரமல்லி 50 கிராம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், 2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்ழுன் சீரகம், ஒன்றரை ஸ்பூன் சோம்பு, 15 வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அதனுடன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன் வதக்கவேண்டும். ஆறிய பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கரகரப்பான பவுடராக அரைத்து, மிக்ஸியிலேயே வைத்துக்கொள்ளவேண்டும்.