நீங்கள் வெடித்துச் சிரிக்க இதோ அடிப்பொலியான ஜோக்குகள்; சிரிச்சுக்கிட்டே இருங்க!
உங்களை மகிழ்விக்க சில ஜோக்குகளும், சிந்தனைளயும் இதோ.
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.
உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!
ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிட்டு வரச்சொன்னாங்களாம். அவன் நேரா மெக்கானிக் ஷாப் போனானாம்? ஏன்?
ஏன்னா, அவன் வாங்கப்போனது வீல் சிப்சாம், ஹாஹாஹா
ஒருத்தர் மெடிக்கல் ஷாப்பில் மருந்துகேட்டாராம். ஆனால் அந்த மருந்து இல்லையாம், அது என்ன மருந்து?
ஏன்னா அவன் கேட்டது வெடி மருந்தாம், ஹாஹாஹா!
டை அடிக்கும் காய் எது?
வெண்‘டை‘க்காய், ஹாஹாஹா!
3 யானை துணி எடுக்கப்போச்சாம், இரண்டு யானை நடந்து போச்சாம், ஒரு யானை மட்டும் டான்ஸ் ஆடிக்கிட்டே போச்சாம், ஏன்?
ஏன்னா அந்தக் கடையில ஆடித்தள்ளுபடி போட்டு இருந்தாங்களாம். ஹாஹாஹா!
ஒருத்தர் எப்போதும் ஆபிஸ்க்கு லேட்டாவே போவாராம், ஏன்?
ஏன்னா ஏன்னா அவரு சாக்‘லேட்’ சாப்பிடுவாராம், ஹாஹாஹா!
ஒருத்தர் கடைக்குச் சென்று 5 கிலோ சர்க்கரை வாங்கிட்டு நடந்து வந்தாராம். வீட்டுக்கு வந்து பார்த்தா 3 கிலோ சர்க்கரைதான் இருந்துச்சாம்.
ஏன்னா நடந்தா சர்க்கரை குறையும்ல்ல, அதான், ஹாஹாஹா!
கோயிலுக்கும், சாமிக்கும் என்ன வித்யாசம்?
கோயில் சிம்பு நடிச்ச படம், சாமி விக்ரம் நடிச்ச படம், அதாங்க வித்யாசம், ஹாஹாஹா!
மழை வர்றதுக்கு முன்னாடி வானம் எப்படி இருக்கும்?
மழை வராம இருக்கும், ஹாஹாஹா!
ஒருத்தர் செல் வாங்கிட்டு பாத்துக்கிட்டே இருந்தாராம், ஏன்?
ஏன்னா, அது பார் ‘செல்’லாம், ஹாஹாஹா!
ஒருத்தர் திடீர்னு பசிக்குதுன்னு மொபைலை கடிச்சு சாப்பிட்டுட்டாராம், ஏன்?
ஏன்னா அது ஆப்பிள் மொபைலாம், ஹாஹாஹா!
ஒரு பழத்த சாப்பிடவும் முடியாது, சூஸ் போடவும் முடியாது, அது என்ன பழம்?
அழுகிபோன பழம், ஹாஹாஹா!
உங்கள் சிந்தனைக்கு
வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
சிரித்தும், சிந்தித்தும் மகிழ்ந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்