ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?
நீங்கள் உங்களுக்கு மட்டுமானது என்று தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் கடைபிடிக்கவேண்டிய புத்திசாலித்தனமான வழிகள் என்னவென்று பாருங்கள். வாழ்க்கை சவால்கள், விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தது. ஆனால் ஒருவர் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது அது எத்தனை தூரம் செல்லும் என்பது முடிவாகும். இது உணர்வு ரீதியான மீள்திறனை வளர்க்கும். மேலும் இது நீங்கள் வலுவான நபராகவும், அமைதியான நபராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருக்க உதவும் முக்கிய திறனாகும். நீங்கள் உங்களின் மகிழ்ச்சியை இழக்காமல் எப்படி கடுமையான நபராக மாறுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
எதையும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கானது என்று எடுத்துக்கொள்ளாதீர்கள்
மற்றவர்கள், அடுத்தவர்கள் அல்லது மற்ற சூழல்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்களோ அது அவர்களின் உள் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அவ்வாறு நடக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, அது மற்றவர்களிடம் இருந்து உங்களை விடுவிக்கிறது. உங்களின் உள் அமைதிக்கு வழிவகுக்கிறது.
சுய இரக்கம் கொள்ளுங்கள்
உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் நீங்கள் எவ்வாறு அன்புடன் நடந்துகொள்கிறீர்களோ அதே அளவுக்கு அன்புடன் உங்களுடனும் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் குழப்பிக்கொண்டாலோ அல்லது தாக்கப்பட்டதாக எண்ணினாலோ உங்கள் உள் விமர்சனத்தை நிறுத்திவிடுங்கள். இது உங்களை பிரச்னைகளில் இருந்து மீண்டு வரவும், மகிழ்ச்சியாக இருக்கவும் உதவும்.