மாதக்கணக்கில் மாதவிடாய் வரவில்லையா? இர்ரெகுலர் பீரியட்ஸ் பிரச்னையா? இதை மட்டும் செய்தால் போதும்!
மாதவிடாய் பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு பிரண்டையும், ஓமமும் உதவ காத்திருக்கின்றன.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மாதவிடாய்
12 வயது முதல் பெண்கள் பூப்படையத் துவங்குகிறார்கள். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கருப்பையில் தோன்றும் கருமுட்டை, உடைந்து வெளியேறுகிறது. அது பெண்ணின் பிறப்புறப்பு வழியாக உதிரமாக வெருகிறது. மாதவிடாய் என்பது பூப்பெய்திய அனைத்து பெண்களுக்கும் வழக்கமாக வரும் ஒன்று. இது ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பத்துக்கு பெண்களின் உடலை தயார்படுத்துவதில் மாதவிடாய் என்பது முக்கியமானது.
இது எப்படி ஏற்படுகிறது
பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லையென்றால், கருமுட்டை உரைந்து மாதவிடாய் உதிரமாக வெளியேறுகிறது. இதுபோல் வெளியேறும்போது, அதில் ரத்தம் மற்றும் கருப்பை திசுக்கள் கலந்திருக்கும்.
எத்தனை நாட்கள் இருக்கும்?
மாதவிடாய் என்பது பொதுவாக பெண்களுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இதில் 1 முதல் 5 ஸ்பூன வரையிலான ரத்தத்தை பெண்கள் ஒரு நாளில் இழக்கிறார்கள்.
எத்தனை நாட்களில் வரும்
மாதவிடாய் என்பது 21 முதல் 35 நாட்களில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். 12 வயது முதல் ஏற்படும் மாதவிடாய் 10 முதல் 15 வயதுக்குள் பெண்களுக்கு ஏற்படுகிறது. 40 வயதுகளின் மத்தியில் இருந்து 50 வயதுகளின் மத்தியில் வரை அது நின்றுவிடுகிறது. அது நிற்பதற்கு முன்னர் படிப்படியாக குறைகிறது.
மாதவிடாயின்போது பெண்களுக்கு வலி எப்படி ஏற்படும்?
பின்புறம் அல்லது அடிவயிற்றில் வலி
தலைவலி
மன மாற்றம்
சோர்வு
கோவம்
கண்ணீர்
முகப்பரு மற்றும் சருமத்தில் மாற்றம்
ஆகியவை ஏற்படுகிறது.
இந்த மாதவிடாய் சரியாக வராமல் அவதிப்படுகிறீர்களா? இது சரியாக இல்லையென்றால், பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு உள்ளது என்று பொருள். எனவே அதை இயற்கை முறையில் வீட்டில் இருந்தே சரிசெய்ய முடியும். அதற்கு பிரண்டை மற்றும் ஓமத்தை உபயோகித்து சரிசெய்யலாம். அது எப்படி என்று பாருங்கள். நீங்கள் பிரண்டையை சுத்தம் செய்து எண்ணெயில் சேர்த்து வதக்கி நன்றாக ஆறவைத்து, காய்ந்த பின்னர் பொடியாகிக்கொள்ளவேண்டும் அல்லது பிரண்டை சூரணம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதைப் பயன்டுத்தி உங்கள் மாதவிடாயை சரிசெய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பிரண்டைப் பொடி – ஒரு ஸ்பூன்
ஓமம் – அரை ஸ்பூன்
தண்ணீர் – 2 டம்ளர்
செய்முறை
2 டம்ளர் தண்ணீரில் பிரண்டைப் பொடி மற்றும் ஓமம் இரண்டையும் சேர்த்து நன்றாக அரை டம்ளர் ஆகும் வரை காய்ச்சவேண்டும். இதை வடிகட்டி பருகவேண்டும். இதை தொடர்ந்து எடுத்துவர உங்கள் மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
பிரண்டையை நாம் தொடர்ந்து எடுத்து வந்தால், அதில் உள்ள கால்சியம் உங்கள் கருப்பையின் சுருங்கி வரும் தன்மையை அதிகரிக்கும். ஓமம் கழிவுகளை வெளியேற்றும். எனவே இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போதும். உங்களுக்கு அது பலன் தரும்.
இதை நீங்கள் மாதவிடாயை எதிர்பார்க்கும் தேதிகளில் 5 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். கட்டாயம் இது உங்களுக்கு நல்ல பலனைத்தரும். வேறு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனுடன் நீங்கள் உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்ளவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்