இளநீர் இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிருதுவாகவும், சுவையானதாகவும், அசத்தலாக இருக்கும்!
இளநீர் இட்லி செய்வது எப்படி?
இட்லி
இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
உளுந்து – அரை கப்
வெந்தயம் – அரை ஸ்பூன்
இளநீர் தண்ணீர் – ஒரு டம்ளர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் என அனைத்தையும் 4 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஊறிய அனைத்தையும் கிரைண்டரில் எடுத்து தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்து எடுத்த அனைத்து மாவு அனைத்தையும், உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவேண்டும்.
தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மாவை கெட்டியாகவே கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். புளித்த மாவில் ஒரு டம்ளர் இளநீர் தண்ணீரை சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்னர் எடுத்து இட்லி பாத்திரத்தில் சேர்த்து இட்லிகளாக வார்த்து எடுத்தால் இளநீர் இட்லி தயார். இது மிகவும் மிருதுவாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் ஒருமுறை ருசித்துப் பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், கறிக்குழும்பு, மீன் குழம்பு என எதுவும் ஏற்றதுதான்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்