தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்
கூந்தல் பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வீட்டிலேயே ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் உங்கள் தலைமுடியை எளிதாக நன்கு பராமரிக்கலாம். இதற்கு, அரிசி நீர் மற்றும் வெங்காய விழுது மட்டும் போதும்.

கூந்தல் பராமரிப்பு என்பது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருந்து வருகிறது. இளம் வயதிலேயே தலைமுடி உதிர்வு என்பது ஆண், பெண் என அனைவருக்கும் பெரும் தலைவலியாகவே இருக்கிறது. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையின் விளைவாக, பல வகையான கூந்தல் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கூந்தல் உதிர்வைத் தடுக்க சந்தையில் பல வகையான ஷாம்புகள், சீரம்கள், எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவற்றால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியைப் பார்க்கலாம். இதற்காக என பல ரூபாய் செலவழிப்பதை தவிர்த்து, நம்மிடம் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை பராமரிக்கலாம். வெங்காயம் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல மூலப்பொருளாக திகழ்கிறது. அதேபோல் அரிசி நீரும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லதாக உள்ளது.